90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

SHARE

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப் பேரவையில் பேசியபோது, ”தமிழகத்தில் 90% மக்கள் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்” – என்று கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக வீட்டில் உள்ள பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் திறன் பேசிகளை வாங்கினர். அதை வளர்ச்சி என்று சொல்வதா? செல்ஃபோன் அவசியமாகிவிட்டபோது அதை ஆடம்பரமாகப் பார்ப்பதா? – என்று சிலர் கேட்டு உள்ளனர்.

மேலும் சிலர், தமிழகத்தில் திறன் பேசிகளை வாங்கும் நபர்களில் பெரும்பாலானோர் மாதத் தவணையில் தொகை செலுத்திதான் வாங்குகின்றனர். கடனுக்கு செல்ஃபோன் வாங்குவதும் வளர்ச்சியா? – என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பிரசாரம் செய்யும்போது, ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது, வளர்ச்சி இல்லை’ – என்று கூறினார்கள். இப்போது அமைச்சர் கூறும் 90% கைபேசிகளில் பெரும்பாலானவை முந்தைய அதிமுக ஆட்சியின்போது மக்களால் வாங்கப்பட்டவைதான். அப்போது அதிமுக பற்றிய திமுகவின் குற்றச்சாட்டுகள் பொய்யா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இது தவிர தமிழக மக்களில் 75%பேர் சொந்தவீடுகளில் வசிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோரின் திருமணமே கூட சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் தள்ளிப் போகும் சூழலில், அமைச்சர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறார்? – என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

Leave a Comment