90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

SHARE

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப் பேரவையில் பேசியபோது, ”தமிழகத்தில் 90% மக்கள் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்” – என்று கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக வீட்டில் உள்ள பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் திறன் பேசிகளை வாங்கினர். அதை வளர்ச்சி என்று சொல்வதா? செல்ஃபோன் அவசியமாகிவிட்டபோது அதை ஆடம்பரமாகப் பார்ப்பதா? – என்று சிலர் கேட்டு உள்ளனர்.

மேலும் சிலர், தமிழகத்தில் திறன் பேசிகளை வாங்கும் நபர்களில் பெரும்பாலானோர் மாதத் தவணையில் தொகை செலுத்திதான் வாங்குகின்றனர். கடனுக்கு செல்ஃபோன் வாங்குவதும் வளர்ச்சியா? – என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பிரசாரம் செய்யும்போது, ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது, வளர்ச்சி இல்லை’ – என்று கூறினார்கள். இப்போது அமைச்சர் கூறும் 90% கைபேசிகளில் பெரும்பாலானவை முந்தைய அதிமுக ஆட்சியின்போது மக்களால் வாங்கப்பட்டவைதான். அப்போது அதிமுக பற்றிய திமுகவின் குற்றச்சாட்டுகள் பொய்யா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இது தவிர தமிழக மக்களில் 75%பேர் சொந்தவீடுகளில் வசிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோரின் திருமணமே கூட சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் தள்ளிப் போகும் சூழலில், அமைச்சர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறார்? – என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

Leave a Comment