90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

SHARE

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப் பேரவையில் பேசியபோது, ”தமிழகத்தில் 90% மக்கள் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்” – என்று கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காரணமாக வீட்டில் உள்ள பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் திறன் பேசிகளை வாங்கினர். அதை வளர்ச்சி என்று சொல்வதா? செல்ஃபோன் அவசியமாகிவிட்டபோது அதை ஆடம்பரமாகப் பார்ப்பதா? – என்று சிலர் கேட்டு உள்ளனர்.

மேலும் சிலர், தமிழகத்தில் திறன் பேசிகளை வாங்கும் நபர்களில் பெரும்பாலானோர் மாதத் தவணையில் தொகை செலுத்திதான் வாங்குகின்றனர். கடனுக்கு செல்ஃபோன் வாங்குவதும் வளர்ச்சியா? – என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பிரசாரம் செய்யும்போது, ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது, வளர்ச்சி இல்லை’ – என்று கூறினார்கள். இப்போது அமைச்சர் கூறும் 90% கைபேசிகளில் பெரும்பாலானவை முந்தைய அதிமுக ஆட்சியின்போது மக்களால் வாங்கப்பட்டவைதான். அப்போது அதிமுக பற்றிய திமுகவின் குற்றச்சாட்டுகள் பொய்யா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இது தவிர தமிழக மக்களில் 75%பேர் சொந்தவீடுகளில் வசிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோரின் திருமணமே கூட சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் தள்ளிப் போகும் சூழலில், அமைச்சர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறார்? – என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

Leave a Comment