டவ்-தே புயல் பாதிப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 53ஆக அதிரிப்பு

SHARE

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டவ்-தே புயலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மாநில பேரிடா் மீட்புக் குழு ஆணையா் ஹா்ஷத் குமாா் படேல், டவ்-தே புயல், குஜராத் மாநிலத்தின் கிா்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. இறுதியாகக் கிடைத்த தகவல்படி, இந்த புயல் பாதிப்புக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை மொத்தம் 53 போ் உயிரிழந்தனா்.

சுவா் இடிந்து விழுந்ததால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்தார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த பிரதமா் மோடி ரூ.1,000 கோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

மேலும், புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தாா்.

இது மட்டும் இன்றி  குஜராத் மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின்

குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அம்மாநில  முதல்வா் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

Leave a Comment