காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

SHARE

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி , சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.

வடசென்னை பகுதியை மேம்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார். அதன் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரையுள்ள கடற்பகுதியை அழகுபடுத்த முடிவு செய்து பல்வேறு பிரிவுகளாக பணிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி ₹5.5 கோடி செலவில் சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் 3 மீட்டரில் நடைபாதையும், அரை மீட்டரில் சாலையோர பூங்காவும் நடைபெற உள்ளது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் இன்று  நடைபெற்றது.

இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மற்றும் திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

இந்தியாவில் கொரோனாபலி 42 லட்சம் ? சர்சைக்குள்ளான அமெரிக்க பத்திரிகை

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

Leave a Comment