- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Nagappan
பிப்ரவரி 17 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்யூஸ் ஆகிய இருவருக்கும் 7ஆவது மகனாகப் பிறந்தார் எடிசன். தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தபோது அவருக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. அதோடு நான்கு வயது வரைக்கும் அவரால் பேச இயலவில்லை. பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளால் அவர் எட்டு வயதில்தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் அவரால் பள்ளி படிப்பை முறையாக தொடர முடியவில்லை. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மூளை வளர்ச்சி சரியில்லை எனக் கூறி எடிசனை வகுப்பறைக்குள் இனிமேலும் அனுமதிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. அப்படி பள்ளியால் நிராகரிக்கப்பட்ட எடிசனுக்கு அவரது அம்மா வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். தன்னுடைய சிறுவயதில் இருந்தே துருதுருவென்று எதாவது செய்துகொண்டே இருக்கும் சிறுவனாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாய்…
பிப்ரவரி 14ம் தேதி மேற்கத்திய கலாச்சாரத்தின் பரவலுக்கு எதிராக பசு அணைப்பு தினமாக கொண்டாட அழைப்பு விடுத்திருந்தது மத்திய அரசின் விலங்குகள் நல ஆணையம். மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நலவாரியம் கடந்த 8ம் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. பிப்ரவரி 14-ந் தேதி உலக நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொதுவாக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். சில இடங்களில் காதலர் தின கொண்டாட்டம் வன் முறையில் முடிந்ததும் உண்டு. இந்நிலையில் மத்திய கால்நடைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவுறுத்தலை விடுத்தது. அதாவது பிப்ரவரி 14-ந் தேதி, பசுக்களை கட்டிப்பிடிக்கக் கூடிய வகையில் பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியான உடனே இணையத்தில் பேசு பொருளானது. விலங்குகள் நல வாரியத்தின்…
இந்தியா போன்ற மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அறிவியல் தொழில் நுட்பம் என்பது மிகவும் முகியமானதாக உள்ளது , அந்த வகையில் அரிதான லித்தியம் தாது, இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசு தரப்பில் பிப்ரவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ரெசி (Reasi) மாவட்டத்தில், சலல் ஹைமனா (Salal Haimana) பகுதியில், கிட்டத்தட்ட 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கூறியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஒரு சிறிய லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே லித்தியம் தாது பொருட்களுக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றது . காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பல சிக்கல்களில் உலக நாடுகள் நகரும் போது, பல்வேறு மின் சாதனங்கள், மின்சார…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பிப்வரி 1ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து அடுத்தடுத்து அமர்வுகள் நடைபெற்றன. அதில் அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்க, இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து அமளி செய்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வந்தன. இந்நிலையில்தான் நேற்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் உரையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் புலியை வேட்டையாட சென்ற 2 பேரின் கதையை கூறி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி…
துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகையே துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்த துருக்கி, சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒரே ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, பிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, பிப்ரவரி 3ஆம் தேதி தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாள்களிலோ நிலநடுக்கம் நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிராங்க் ஹோகர்பீட்ஸ் பேசிய வீடியோவை தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும்…
பிறந்த குழந்தை ஒன்று அழாமல் “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியதாக பரவிய செய்தி இணையத்தில் வெளியானது. பெரிய செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட, இணையம் முழுவதும் இந்த செய்தி தீயாகப் பரவியது. பலரும் அதிசயக் குழந்தைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா? பிறந்த குழந்தை எப்படிப் பேசும்? – என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள களியாம்பூண்டி என்ற கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சந்திரன் – ரேவதி என்ற இணையருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைதான் பேசியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் குழந்தையின் தாயும் அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் குழந்தை பேசியதாக ஊடகங்களுக்கு கூறியது ஏன் எனத் தெரியவில்லை. குழந்தையின் தாயுடன் இருந்த உதவியாளர் ஊர்மக்களிடம் குழந்தை பேசியதாக கூறியதும் அங்கு குழந்தையைக் காண பலர் கூடியுள்ளனர். அதனைத்…
கடந்த கால் நூற்றாண்டாகவே துருக்கி பல்வேறு பயங்கர நில நடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இப்போதும் துருக்கி உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. துருக்கியின் கடந்தகாலமும் எதிர்காலமும் என்ன? – விரிவாகப் பார்ப்போம். துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புடைய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அனடோலியன் புவித் தட்டில் அமைந்திருக்கிறது. இந்தத் தட்டு யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது. இதனால் ஒரு பெரிய பூகம்பம் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாகவே எச்சரித்து வருகின்றனர். துருக்கியின் வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது. அதில் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட…
இன்று எழுத்தாளர் கல்கி அவர்களின் 123ஆவது பிறந்த நாள். அவரைப்பற்றிய சில நினைவலைகள். கல்கியின் சாதனைதான் என்ன..? அவர் ஒரு இலக்கியவாதியா..? நூறாண்டு கடந்தும் அவர் கொண்டாடப்படுவதன் மந்திரம்தான் என்ன..? ”சரித்திரத்தின் பெருமையை அடுப்பறை பெண்களும் எட்டிப்பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கல்கி” – என்றார் அறிஞர் அண்ணா. உண்மைதான்.பெரும் ஆய்வாளர்கள் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த வரலாற்று உலகின் வாசலை வெகு சாமானியனுக்காக திறந்து விட்டவர். 1950 – கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர் ஆரம்பம் .. ஒரு அத்தியாயத்தில் இவ்வாறு கூறுவார். ”பிற்காலத்தில் கோப்பரகேசரி என்னும் பட்டத்துடன் சோழசிங்காதனம் ஏறப்போகும் உத்தமச்சோழரை நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.. இந்த கோபரகேசரி என்னும் வார்த்தையின் பரிட்சயம் நீலகண்ட சாஸ்திரி போன்ற ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. ஆனால் பொன்னியின் செல்வன் வந்தப்பிறகு சரித்திரம் சாதரண மக்களுக்கும் சொந்தமானது. அன்றைய காலத்தில் நந்தினி கொண்டை மிகவும் வைரலாம். இன்றைக்கும் பிரபல பதிப்பகமான…
Windows Professional Crack இன்று நாம் பணத்தை எளிமையாக பயன்படுத்துகிறோம். இந்த பணம் எப்போது தோன்றியது? பணம் என்ற ஒன்று வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது? பணம் என்ற ஒன்று வந்த பிறகு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது? பணம் என்ற ஒன்று எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்து நம்மிடையே வந்தது? பணத்திற்கு பதிலாக நாம் பயன்படுத்திய பொருள்கள் என்னென்ன? தங்கம், வெள்ளி, வைரம், பண்டைய காசுகள், உலக வரலாற்றில் பணம் என்ற ஒன்று எப்படியெல்லாம் இருந்தது? அவற்றின் வரலாறு எப்படி இருந்தது? எந்தெந்த காலத்தில் என்னென்ன பொருட்களை கடந்து வந்துள்ளோம்? – என்பதையெல்லாம் இந்த நூலைப் படிக்கும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது. வங்கி என்ற ஒன்று எப்போது வந்தது? எதனை அடிப்படையாக வந்து வங்கி தொடங்கப்பட்டது? பணத்தாள்களுக்கு எப்படி மதிப்பு கூடியது? – போன்ற பல கேள்விகளுக்கு ஆசிரியர் விரிவாக விடையளித்துள்ளார். பணத்தின் பயணம் என்ற தலைப்பும்…
Tally ERP Crack சென்னை : தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். அந்தக் கடிதத்தில், கர்நாடகாவின் கோட்டேகிரி என்ற கிராமத்தில் சில ஆண்டுகள் முன்பு ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலின் அருகே இராஜராஜ சோழனின் முதல் பேரனாகிய ஸ்ரீ உடையார் இராஜாதிராஜ தேவர் என்ற தமிழ் அரசர் குறித்த கல்வெட்டுகள் இருப்பதை 1947ல் ஐரோப்பிய தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கோட்டேகிரியில் இராஜேந்திர சோழீஸ்வரம் என்ற கோவில் இருந்துள்ளது, இது 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் ஆகும். இக்கோவிலில் இருந்த பஞ்சலோக சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் திருடப்பட்டுள்ளன, கோவிலையும் இப்போது காணவில்லை. கோட்டேகிரியில், 949 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னரால்…