Author: Admin

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் – ஐடியா நிறுவனம் கடன் சுமையால் திண்டாடி வருவதால் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் – ஐடியா நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 27 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே வோடஃபோன் – ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தவிர வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டியையோ அல்லது அசலையோ திரும்ப செலுத்தவும் வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. தற்போது அந்நிறுவனத்திடம் ரூ.350 கோடி ரொக்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், தற்போதைய நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வோடபோன் நிறுவனம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரூ.25,000 கோடியை கடன்…

Read More

பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர்களை நீக்கி அவர்களின் அடையாளத்தை அரசு சிதைக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்களிலும், மற்ற நூல்களிலும், தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சமீபத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் என்பதற்கு பதில் உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழக…

Read More

பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரபல வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேர்தல் வியூக நிபுணராக பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் வெற்றிக்கு காரண கர்த்தாவாக விளங்கிய பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரச்சார வியூகம் அமைத்தார். இதனால் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸூம் அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன். அதனால் ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தெரிவித்திருந்தார். இதனிடையே ஏற்கனவே ஒப்புக்கொண்டு இருந்ததால் அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முதல்வர் அமரீந்தர் சிங்கின் அரசியல்…

Read More

2020-21 ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று அழைக்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிகளில் கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள், அலுவலகங்களில்‌ நிர்வாகப் பணி மேற்கொள்ளும்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ எவ்விதக்‌ குற்றச்சாட்டிற்சூம்‌, ஒழுங்கு நடவடிக்கைக்கும்‌ உட்படாதவராகவும்‌, பொதுவாழ்வில்‌ தூய்மையானவராகவும்‌, பொது சேவைகளில்‌ நாட்டம்‌ கொண்டவராகவும்‌, பள்ளி மாணவர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைத்தல்‌, பள்ளி மாணவர்‌ சேர்க்கை, தேர்வில்‌ தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல்‌, கல்வித்தரத்தில்‌…

Read More

நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் “நெற்றிக்கண்”. இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 29 ஆம் தேதி இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுத பூர்வி கௌட்டிஷ் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Read More

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் தனுஷூக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நுழைவு வரியாக ரூ.60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. ரூ. 30.33 லட்சம் செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பை பின்பற்றி வாகனத்தை பதிவு செய்ய 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு…

Read More

அமேசான் நிறுவனம் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை இந்த விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதில் சிறப்பு விற்பனையில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்தால் 10 சதவீத சலுகையும், எக்சேஞ்ச் ஆஃபரில் ரூ.13,000 வரையில் தள்ளுபடி பெறலாம். அதேபோல் கேமரா, டிரைபேட், ரிங் லைட், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஸ்பீக்கர், ஹை ஸ்பீட் வைஃபை போன்ற பொருட்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் OnePlus Nord 2…

Read More

மீண்டும் மின்வெட்டு தொடங்கியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை கஸ்தூரி அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல இடங்களில் மின்தடை ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், இவற்றிற்கு அணில்கள் தான் காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதேசமயம் அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுத்த சில தினங்களில் இனி மின்வெட்டு பிரச்சனை இருக்காது என்று தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மின்தடை தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறுபடியும் பவர் கட் ஆரம்பித்துவிட்டது. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து கரண்ட் இல்லை. சென்னையை சுற்றியிருக்கும், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரண்ட் கட் பற்றியே…

Read More

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது.இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 2 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

Read More

வெளிநாட்டில் இருந்து வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரியாக ரூ.60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகர் தனுஷ். 2015இல் சொகுசு காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். 50% வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்திற்கு 2015 அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் ஆணையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரியாக ஒரு லட்சம் அபராதம் விதித்ததற்கு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Read More