“எங்களுக்கு பவர்கட்..உங்க ஏரியா எப்படி? ”- அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய நடிகை கஸ்தூரி

SHARE

மீண்டும் மின்வெட்டு தொடங்கியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை கஸ்தூரி அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல இடங்களில் மின்தடை ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், இவற்றிற்கு அணில்கள் தான் காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அதேசமயம் அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுத்த சில தினங்களில் இனி மின்வெட்டு பிரச்சனை இருக்காது என்று தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் மின்தடை தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறுபடியும் பவர் கட் ஆரம்பித்துவிட்டது. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து கரண்ட் இல்லை.

சென்னையை சுற்றியிருக்கும், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரண்ட் கட் பற்றியே யோசிக்காதவர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் இங்கு கரண்ட் கட் ஆகிறது.. உங்க ஏரியாவில் எப்படி?” என கேட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஐடியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சமீப காலமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டி வரும் கஸ்தூரி தற்போது தெரிவித்துள்ள மின்தடை புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது பதிலடி கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

ஓவைசி கட்சியினர் தாலிபான்கள் போன்றவர்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

Leave a Comment