புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

SHARE

பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர்களை நீக்கி அவர்களின் அடையாளத்தை அரசு சிதைக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்களிலும், மற்ற நூல்களிலும், தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சமீபத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

அதில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன.

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் என்பதற்கு பதில் உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை தமிழக அரசு நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும் எனக் கூறியுள்ளார். தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

Leave a Comment