- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
1957ஆம் ஆண்டில் வெளியான ஹெச்.எம்.படேல் கையெழுத்துடன் கூடிய ரூ.1 பணத்தாள் ஒரு இணைய தளத்தால் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளப்படுகின்றது – என்று ஒரு செய்தியை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. இதன் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்… முதலாவதாக, ஒரு ரூபாய் நோட்டை 45,000 ரூபாய்க்கு வாங்கும் இணையதளமாக செய்திகளில் கூறப்பட்ட ‘காயின்பஜார் டாட் காம்’ என்பது ஒரு நாணய விற்பனையாளர் அல்ல. அது ஒரு மின் வர்த்தக செய்தித்தளம். ஈபே, அமேசான், பிளிப்கார்ட் போல. மேலும், அந்த தளம் வாயிலாக நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கும் பதிவு பெற்ற நிறுவனங்கள்தான் வியாபாரம் செய்கின்றனர். இந்த தளத்தில் உரிமையாளர்கள் நாணயங்களையோ பணத்தாள்களையோ வாங்குவதோ விற்பதோ இல்லை. அந்த தளத்தில் ஓவியா கலெக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தினர் வெளியிட்ட வணிக அறிவிப்பை ஊடகத்தினர் தவறாகப் புரிந்து கொண்டதால்தான் முழு சிக்கலும் ஏற்பட்டு உள்ளது. ஓவியா கலெக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் உள்ள பொருளின்…
போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் வெளியிட்ட உத்தரவுக்கு மாறாக ஜெர்மனி நாட்டின் கத்தோலிக பாதிரியார்கள் தற்பாலின ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் கத்தோலிக சமயத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. ”தற்பாலின ஜோடிகளின் திருமணம் இயற்கைக்கு முரணானது என்பதாலும் உலகின் படைப்புக்கு எதிரானது என்பதாலும் தற்பாலின ஜோடிகளுக்கு கத்தோலிக பாதிரியார்கள் திருமணம் செய்து வைக்கக் கூடாது” – என போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக சமயத்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஏற்கனவே பத்துக்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகளில் தற்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2013ஆம் ஆண்டில் போப்பாண்டவராகப் பதவியேற்ற போப் பிரான்சிஸ் அப்போது தற்பாலின ஈர்ப்புள்ள மக்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. ‘ஒருவர் தற்பாலின ஈர்ப்பு உள்ளவராக இருந்தாலும் அவருக்கு இறை நம்பிக்கை இருக்கலாம், அவரை மதிப்பிட நான் யார்?’ – என்று அவர் அப்போது சொன்ன…
ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவுகளை உடையவர்கள் கொரோனாவுக்கு இலக்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் இச்சூழலில் அதை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவின் தாக்குதலுக்கு யாரெல்லாம் எளிதில் இலக்காகிறார்கள் என்பது குறித்து இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு அமைப்பான சிஎஸ்ஐஆர் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகளில் ‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.மேலும் ஓ இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனாவின் அறிகுறிகள் கூட தீவிரமாக வெளிப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. அத்தோடு நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகம் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு…
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கியது, அத்தோடு மாவட்டவாரியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும் அமைச்சர்களையும் அறிவித்தது. அவற்றின் தொடர்ச்சியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் இலவசமாக உணவு வழங்கும் சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலசவ உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. பிரியா வேலு
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று உள்ள இறையன்பு அவர்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, ”நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது” – என்று கடிதம் எழுதி உள்ளார். அத்தோடு, ”அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம்” – என்று அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். இறையன்பு அவர்களின் இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது. ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இறையன்பு அவர்கள் எழுதிய மிகப் பெரும்பாலான நூல்கள் பள்ளி மாணவர்களும், மக்களும், அரசு அதிகாரிகளும் கட்டாயம் படிக்க வேண்டியவை. மிகத் தரமானவை. தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும், பாடங்களை எப்படி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலாவது சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குவதால் கலைவாணர் அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இட நெருக்கடி காரணமாக தமிழக அரசின் சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகின்றது. அதனால் நேற்றே கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற அவரது முழக்கத்தோடு வைக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்து வருவதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவாரின் புகைப்படத்தை பேரவையில் வைப்பதா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் உருவப்படம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதனை…
உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. நேற்றுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இதுவரை கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 நபர்கள் குணமடைந்து உள்ளனர். கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆகும். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 153 நபர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விட அதிகமாக…
கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!. கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொண்டு இரண்டாம் தவணைக்குக் காத்திருப்போருக்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கும் மேல் உள்ள இணைநோயும் உள்ளவர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் கடந்த மார்ச் 1 அன்று தொடங்கியது. கடந்த ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – என்று இந்த திட்டம் மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டுவகை தடுப்பூசிகளும் போடபட்டன. இப்படியாக முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த காலம் 4 முதல் 6 வாரங்கள் ஆகும். தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கோவாக்சின் போட்டுக் கொண்ட பலருக்கு இரண்டாவது தவணை…
கொரோனா நிவாரணத் தொகையாக குடும்பங்களுக்கு தலா ரூ.4000 தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் தவணை ரூ.2000 வழங்கும் பணிகள் இன்று தொடங்குகின்றன. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக அறிவித்து இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அந்த வாக்குறுதியை திட்டமாக்கினார். அதன் அடிப்படையில் தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் பணிகளை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதன்படி குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த டோக்கன்களில் நிவாரணம் தொகை வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்தத் தொகை 500 ரூபாய் நோட்டுகளாகவோ 2000 ரூபாய் நோட்டாகவோ…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகத்தைத் தொட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 30,000 என்ற எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 151 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,012 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. நமது நிருபர்