கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

SHARE

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!.

கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொண்டு இரண்டாம் தவணைக்குக் காத்திருப்போருக்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கும் மேல் உள்ள இணைநோயும் உள்ளவர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் கடந்த மார்ச் 1 அன்று தொடங்கியது. கடந்த ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – என்று இந்த திட்டம் மாற்றப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டுவகை தடுப்பூசிகளும் போடபட்டன. இப்படியாக முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த காலம் 4 முதல் 6 வாரங்கள் ஆகும்.

தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கோவாக்சின் போட்டுக் கொண்ட பலருக்கு இரண்டாவது தவணை ஊசி போடுவது தள்ளிப் போனது, ஆனால் கோவிஷீல்டு இரண்டாம் தவணையும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவாக்சின் இரண்டாம் தவணை போட வேண்டிய மக்கள் எப்படி அதற்காக முன்பதிவு செய்வது என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி மாநகராட்சி அளித்துள்ள ஒரு இணைய இணைப்பில் மக்கள் பதிவு செய்து கொண்டால் எங்கு, எப்போது அவர்களுக்கு கோவாக்சின் போடப்படும் என்ற தகவலை அவர்கள் உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம்.

கோவாக்சின் இரண்டாம் தவணைக்காக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்: //t.co/mS2DNwPVA8 

அல்லது இந்த இணைய முகவரியையும் பயன்படுத்தலாம்: http://covid19.chennaicorporation.gov.in/covid/Registration/index.jsp

– நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

அணிலை தொடர்ந்து பாம்பு.. சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

Leave a Comment