ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

SHARE

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவுகளை உடையவர்கள் கொரோனாவுக்கு இலக்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் இச்சூழலில் அதை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவின் தாக்குதலுக்கு யாரெல்லாம் எளிதில் இலக்காகிறார்கள் என்பது குறித்து இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு அமைப்பான சிஎஸ்ஐஆர் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 

அந்த ஆய்வின் முடிவுகளில்  ‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.மேலும் ஓ இரத்தப்  பிரிவை சேர்ந்தவர்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனாவின் அறிகுறிகள் கூட தீவிரமாக வெளிப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்தோடு நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகம் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு சீனா, இத்தாலி,ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் இரத்த வகைக்கும் கொரோனா பரவலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே தங்கள் ஆய்வுகளில் கூறி இருந்தன என்பதால் சிஎஸ்ஐஆரின் இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

ஆனால் சில குறிப்பிட்ட மாதிரிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்பதால், இதன் முடிவுகளை அப்படியே ஏற்க இயலாது என்றும் பல மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

Leave a Comment