ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

SHARE

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவுகளை உடையவர்கள் கொரோனாவுக்கு இலக்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் இச்சூழலில் அதை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவின் தாக்குதலுக்கு யாரெல்லாம் எளிதில் இலக்காகிறார்கள் என்பது குறித்து இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு அமைப்பான சிஎஸ்ஐஆர் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 

அந்த ஆய்வின் முடிவுகளில்  ‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.மேலும் ஓ இரத்தப்  பிரிவை சேர்ந்தவர்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனாவின் அறிகுறிகள் கூட தீவிரமாக வெளிப்படுவது இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்தோடு நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் அதிகம் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு சீனா, இத்தாலி,ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும் இரத்த வகைக்கும் கொரோனா பரவலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே தங்கள் ஆய்வுகளில் கூறி இருந்தன என்பதால் சிஎஸ்ஐஆரின் இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 

ஆனால் சில குறிப்பிட்ட மாதிரிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்பதால், இதன் முடிவுகளை அப்படியே ஏற்க இயலாது என்றும் பல மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது மோடி அரசு – ப.சிதம்பரம்

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

Leave a Comment