Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the ads-for-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/vgcsilru/meiezhuththu.com/wp-includes/functions.php on line 6121
15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம். – Mei Ezhuththu

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

SHARE

உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

நேற்றுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இதுவரை கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 நபர்கள் குணமடைந்து உள்ளனர். கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆகும். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 153 நபர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விட அதிகமாக உள்ளது. சிறுவர்களும் குழந்தைகளும்கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கொரோனா மீது சிறிதும் அலட்சியம் காட்டாமல் மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்போம். முகக் கவசம், கை தூய்மை ஆகியவற்றைப் பின்பற்றுவோம். கொரோனாவில் இருந்து விலகி நிற்போம்.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

ஏன் துருக்கியில் மட்டும் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகின்றது ? – இதுதான் காரணமா?

Nagappan

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஜெப் ஃபெசோஸ் விலகல்.. இதுதான் காரணமா.?

Admin

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

டுவிட்டர் தடையின் எதிரொலி… நைஜீரியாவில் கால் பதிக்கும் இந்திய செயலி….

Admin

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

Leave a Comment