15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

SHARE

உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

நேற்றுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இதுவரை கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 நபர்கள் குணமடைந்து உள்ளனர். கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆகும். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 153 நபர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விட அதிகமாக உள்ளது. சிறுவர்களும் குழந்தைகளும்கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கொரோனா மீது சிறிதும் அலட்சியம் காட்டாமல் மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்போம். முகக் கவசம், கை தூய்மை ஆகியவற்றைப் பின்பற்றுவோம். கொரோனாவில் இருந்து விலகி நிற்போம்.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

Leave a Comment