கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

SHARE

கீழடி அகழாய்வில் முதன் முறையாக அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, சிவப்பு பானை, பானை ஓடுகள் உள்ளிட்டவை கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. கீறல்களை கொண்ட பானை ஓடுகள் மட்டும் இதுவரை 1,300க்கும் மேற்பட்டவைகள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது ஏழாம் கட்ட அகழாய்வில் அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் அதிகபட்ச எழுத்துகளை கொண்ட பானை ஓடு இதுதான் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 எழுத்துகள் அடங்கிய பானை ஓடுதான் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன், உதிரன் – போன்ற பெயர்கள் இருந்தன. இந்த பானை ஓட்டில் உள்ள எழுத்துகளும் ஒரு குறிப்பிட்ட பெயருக்கு உரியவைதான். அந்த பெயர் என்னவாக இருக்கும்?-என்ற கேள்வி எழுந்துள்ள‌து. இது குறித்து தமிழக தொல்லியல் துறையினருடன் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

Nagappan

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

Admin

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

Admin

Leave a Comment