Author: இரா.மன்னர் மன்னன்

மெய் எழுத்து வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. சிற்ப இலக்கணம் தொடருக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உலகப் பிரசித்தி பெற்றவை. தமிழர்களின் கலைகள், இலக்கியங்கள், கோவில்கள், சிற்பங்கள்… ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கோவில்களும் அங்கே இருக்கும் சிற்பங்களும் தமிழரின் கலை வரலாற்றில் தவிர்க்க இயலாதவை. சிற்பம் ஒன்று அமைவதற்கு ஒரு வரையறை உண்டு. வரையறையின் கீழ் அமையும் சிற்பங்களுக்கு உயிர் உண்டு. இந்த சிற்ப வரையறையை எளிமையாக நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளத்தான் இத்தொடர்… ” சிற்ப இலக்கணம் ” இந்தத் தலைப்பில் எங்கிருந்து தொடங்குவது.? சங்ககாலம்.. நீத்தார் நினைவு கல்.. நடுகல் என்று ஆரம்பத்திலிருந்து தொடங்கினால் இத்தொடர் ரொம்பவே நீ…..ண்டதாய் இருக்கும்.. சிற்பங்களின் தோற்றம்.. வளர்ச்சி என்று தொடங்கினால் அது ஒரு ஆய்வுக் கட்டுரையாகக் அமையும். உத்தம ஷட்தானம் .. சப்ததானம் என்று ஆரம்பித்தால் அது சிற்பிகளுக்கான வழிமுறை ஆகிவிடும். சுத்தி வளைக்காம நேரிடையாக விடயத்திற்கு வருவோம்.…

Read More

தமிழர்களின் வரலாறு உயிர்த்து இருக்கும் இடங்களில் முக்கியமானவை கோவில்கள். தமிழகக் கோவில்கள்தான் பண்டைய தமிழர்களின் கணக்கியல் திறன், கட்டுமான அறிவு, கல்வியறிவு, பண்பாட்டு முதிர்ச்சி – ஆகியவற்றுக்கு சான்றுகளாக உள்ளன. தமிழக கோவில்களும், கல்வெட்டுகளும் இல்லை என்றால் தமிழர்களின் வரலாறு இன்னும் மோசமாகத் திரிக்கப்பட்டு இருக்கும். தமிழகக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மீது இப்போது வெளிச்சம் பாயத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் சிற்பங்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் தவழும் நிலையிலேயே உள்ளன, அவை சாமானியர்களைச் சென்று சேரவில்லை. உலக நாடுகளின் அருங்காட்சியகங்கள் தமிழரின் சிற்பத் திறனை வியக்கும் நிலையில், தமிழர்களால் அவற்றின் அழகை அதிகம் பருக இயலவில்லை என்றால் அது தமிழர்களுக்குப் பேரிழப்பே. கோவில் சிற்பங்களை தமிழர் கலையின் ஒரு பங்காக எடுத்துக் கொண்டு, அவற்றை அறிய முயற்சிப்பவர்களுக்கு வழி காட்டுவதே இந்தத் தொடரின் நோக்கம் ஆகும். சிற்பங்கள் குறித்த சொற்கள் காலத்தால் சமஸ்கிருத மயமாக்கப்பட்டு உள்ளன. சொற்கள் மாற்றப்பட்டு இருந்தாலும்…

Read More

பிரபல செய்தி ஊடகங்களான பாலிமர் மற்றும் நியூஸ் 18 ஆகியவை டிராக்டர் உருவமும் 786786 என்ற எண்ணும் உள்ள பணத்தாளை பொதுமக்கள் வைத்திருந்தால், அவர்கள் ’காயின் பஜார் டாட் காம்’ என்ற இணைய தளத்திற்கு சென்று அதனை 30,000 ரூபாய்க்கு விற்கலாம் என்று செய்தி வெளியிட்டு உள்ளன. இது தவறான செய்தி ஆகும். காயின் பஜார் டாட் காம் என்பது உண்மையில் ஒரு இணைய விற்பனை தளம் மட்டுமே, அவர்கள் விற்பனையாளர்கள் அல்ல. அதாவது அவர்களின் இணைய தளத்தின் வழியாக பிறர் தங்கள் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை விற்க காயின் பஜார் டாட் காம் அனுமதிக்கிரதே தவிர, அவர்கள் நேரிடையாக விற்பது கிடையாது. இப்படி நடக்கும் விற்பனைக்கும் அவர்கள் நேரடி பொறுப்பாளிகள் கிடையாது. காயின் பஜார் டாட் காம் – விற்பனைத் தளத்தில் உள்ள, ஓவியா கலெக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தங்களிடம் உள்ள 786786 என்ற எண் கொண்ட டிராக்டர் உருவம்…

Read More

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இளம் ஓவியர், ‘தத்ரூப ஓவியர்’ எனப் போற்றப்படும் இளையராஜா கொரோனா தொற்றால் மறைந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியர்களான ரவிவர்மாவும், எம்.எஃப்.உசேனும் பெண்களை கவர்ச்சியாக வரைவதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். ரவி வர்மாவின் ஓவியங்கள் உயர்குடிப் பெண்களாலும் உசேனின் ஓவியங்கள் புகழ்பெற்ற பாத்திரங்களாலும் நிரம்பி இருந்தன. இவற்றுக்கு மாற்றாக தமிழகத்துப் பெண்களின் கண்ணியம் மிக்க ஓவியங்களைக் காட்சிப்படுத்தி, அதன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளையராஜா. இளயராஜாவின் இழப்பு தமிழ்ப் பாரம்பரியத்தின் மிகப் பெரிய இழப்புகளில் ஒன்று. அதை உணர, அவர் வரைந்த சில பிரபல ஓவியங்கள் வாசகர்களுக்காக… சுடரொளி

Read More

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணை தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யார் இந்த ஜெ. ஜெயரஞ்சன்? – விரிவாகப் பார்ப்போம்… பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜெ.ஜெயரஞ்சன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரக் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கிராம இயக்கவியல் குறித்து ஆய்வு செய்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுவையில் 4 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், 1983ஆம் ஆண்டில் சென்னைக்கு இடம் பெயர்ந்த இவர், தொடர்ந்து பல பெரிய நிறுவனங்களில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றி உள்ளார். தமிழில் பல்வேறு ஊடகங்களில் கட்டுரைகளை எழுதியும், பேட்டிகள் கொடுத்தும் தனது கருத்தை வெளிப்படுத்தி வருபவர் ஜெ.ஜெயரஞ்சன். தமிழ் ஊடகங்களைப் போலவே ஆங்கில ஊடகங்களுக்கும் தொடர்ந்து நேர்காணல்களை அளித்து வருகிறார். பொருளாதாரம் குறித்த பல சர்வதேச இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கடந்த தேர்தலின்போது தமிழகம் வந்த ராகுல்…

Read More

எட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு. எந்தவொரு புத்தகத்தின் முன்னுரையும் படிப்பது முதலில் அலுப்பு தட்டுவதாக இருக்கும். எதேச்சையாக இப்புத்தகத்தை முன்னுரையில் இருந்து ஆரம்பித்தேன், எதேச்சையாகத்தான். இதனை எழுதிய ஹாருகி முரகாமி பற்றி அதிக புகழ்ச்சி ஆஹா.. ஓஹோ என்று… எழுத்தாளரை பற்றி ஒரளவு மட்டும் அறிவேன். ஆனால்,தமிழ் வாசக உலகை ஈர்க்கும் அளவிற்கு சரக்கு உள்ளதா..? எனது கேள்விக்கு நூலின் முதல் கதையே பதில் அளித்து விட்டது..! ஆளுண்ணும் பூனைகள் – கதை: மூடிய வீட்டில் மூன்று பூனைகளுக்கு உரிமையாளரான தனிமையிலிருக்கும் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் இறந்து விடுகிறார். வெளியே வர வழியில்லாத கொலைப்பட்டினி பூனைகள் வளர்த்த முதியவளின் சதையை பிய்த்துத் தின்ற நிகழ்வை / செய்தியை, அச்சாணியாக கொண்டு கதை நகர ஆரம்பிக்கிறது… “அப்புறம் என்ன நடந்தது…?” வாசித்து அனுபவியுங்கள். “இனிப்பு ” என்று சொல்ல முடியும் நீங்கள் தான் சுவைப் பார்க்க வேண்டும். கதையில் சில வரிகள்…

Read More

அசாமில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாமனாரை மருமகள் ஒருவர் முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மகன் சொந்த ஊரில் இல்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பது சிக்கலாகியுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகமானதையடுத்து, மருத்துவமனைகள், கொரோனா படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.. அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் சேவைக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் மருமகளான் நிகாரிகா மட்டுமே இருந்ததால் அவரை முதுகில் சுமந்தபடியே அருகில் இருக்கும் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் துலேஷ்வரை கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவரை தூக்கி வந்த நிகாரிகாவுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு மருத்துவமனையில் அனுமதித்துளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதையடுத்து இணைவாசிகள் அதனை பகிர்ந்து வருகின்றனர். மூவேந்தன்

Read More

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மக்களிடம் செயல்படுத்த சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனிமனித பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பதில் மனு தாக்குல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வாட்ஸ்அப் பற்றிய பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. அதில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை பயனாளர்களின் மீது திணிப்பதற்காக தந்திரமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதை தடுக்க நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ – என கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, ’தற்போது தனிநபர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால்அதற்கு முன்பாக தனது கொள்கைகளை மக்களை ஏற்க வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சிக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய…

Read More

ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் உணரப்பட்டு வருவதால், பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து 7வது முறையாக அந்த ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் ஆர்பிஐ செய்யவில்லை. கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பின், இந்த ரெப்போ 4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ 3 புள்ளி 35 சதவீதமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பணப்புழக்கத்தை சீராக வைக்கும் நோக்கிலேயே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்குவோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூவேந்தன்

Read More

இந்தியாவுக்கு முதற்கட்டமாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது இதையடுத்து நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி. அமெரிக்காவில், பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி போட்டாகிவிட்ட நிலையில் மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகளை தேவை உள்ள உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்திருந்தார். அதன்படி, தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை, தடுப்பூசி கிடைக்காமல் திணறி வரும் நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பெறுவதற்காக இந்தியா முயற்சி மேற்கொண்டது. சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக அமெரிக்க அரசை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் முதல் கட்டமாக 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை தேவை உள்ள நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். இதில் ஒரு பகுதியாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் மோடியுடன்…

Read More