சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

SHARE

தமிழர்களின் வரலாறு உயிர்த்து இருக்கும் இடங்களில் முக்கியமானவை கோவில்கள். தமிழகக் கோவில்கள்தான் பண்டைய தமிழர்களின் கணக்கியல் திறன், கட்டுமான அறிவு, கல்வியறிவு, பண்பாட்டு முதிர்ச்சி – ஆகியவற்றுக்கு சான்றுகளாக உள்ளன. தமிழக கோவில்களும், கல்வெட்டுகளும் இல்லை என்றால் தமிழர்களின் வரலாறு இன்னும் மோசமாகத் திரிக்கப்பட்டு இருக்கும்.

தமிழகக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மீது இப்போது வெளிச்சம் பாயத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் சிற்பங்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் தவழும் நிலையிலேயே உள்ளன, அவை சாமானியர்களைச் சென்று சேரவில்லை. 

உலக நாடுகளின் அருங்காட்சியகங்கள் தமிழரின் சிற்பத் திறனை வியக்கும் நிலையில், தமிழர்களால் அவற்றின் அழகை அதிகம் பருக இயலவில்லை என்றால் அது தமிழர்களுக்குப் பேரிழப்பே. கோவில் சிற்பங்களை தமிழர் கலையின் ஒரு பங்காக எடுத்துக் கொண்டு, அவற்றை அறிய முயற்சிப்பவர்களுக்கு வழி காட்டுவதே இந்தத் தொடரின் நோக்கம் ஆகும்.

சிற்பங்கள் குறித்த சொற்கள் காலத்தால் சமஸ்கிருத மயமாக்கப்பட்டு உள்ளன. சொற்கள் மாற்றப்பட்டு இருந்தாலும் அவை நமது செல்வங்களே. பெருவுடையாரை பிரதீஸ்வரர் என்று மறுபெயரிட்டு அழைத்தாலும் அவர் தமிழர் கடவுளே. எனவே சிற்பக் கலை தொடர்பான சமஸ்கிருத சொற்களை வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

தமிழக கோவில் சிற்பங்கள் குறித்தும், தமிழரின் கலை நயம் குறித்தும் மிக நீண்ட ஆய்வுகளை மேற்கொண்ட மா.மாரிராஜன் அவர்கள், சிற்பக் கலை குறித்து மிக எளிமையாக விளக்கும் இந்தத் தொடர் நாளை முதல் வெளியாகின்றது.

  • ஆசிரியர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

இனிமே மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவுக்கு ரூ.600 இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

எனக்கு எதுவும் தெரியாது சார்….. காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

Leave a Comment