- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த எம்.பி பாபுல் சுப்ரியோ தனது முடிவை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார். பாலிவுட்டில் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாபுல் சுப்ரியோ 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அசன்சோல் தொகுதியின் எம்.பியாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பதவி வகித்து வந்த பாபுல் சுப்ரியோ சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றம் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த அவர் சில தினங்களுக்கு முன், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை பாபுல் சுப்ரியோ சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு எம்பியாக தனது கடமையை தொடரவிருப்பதாககும், அரசியலில் இருந்து விலகுவது மற்றும் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவது ஆகிய முடிவுகளில் மாற்றமில்லை…
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி அணிக்கான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் போட்டி ஒன்றில் 49 ஆண்டுகளுக்கு பின் தேர்வாகி உள்ள இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை பெற, இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் அடித்து இறுதியாக 5-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இந்திய அணி தோற்று இருந்ததால் இந்தப் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி செய்த தவறால் பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்று பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நட்பின் இலக்கணமாக இரு நாட்டு வீரர்கள் மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நண்பர்கள் தினமான நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தாரின் முதாஜ் எஸ்ஸா பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கப் பதக்கத்திற்காக கடுமையாகப் போராடினார்கள். கடைசியில் ஜன்மார்க்கோ டம்பேரி மற்றும் முட்டாஸ் பார்ஷிம் இருவரும் மட்டும் 2.37 மீட்டருக்கு தாண்டி சமநிலையில் இருந்தனர். இதனால் யாருக்கு தங்கப்பதக்கத்தை கொடுப்பது என்ற கேள்வி எழ டை பிரேக்கர் சுற்று தொடங்கியது. இதில் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் இருவராலும் சரியாகத் தாண்ட முடியவில்லை. இதனால் நடுவர் இருவரிடமும் கடைசியாக ஒருமுறை தாண்டுகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். ஆனால் கடும் கால் வலி காரணமாக போட்டியில் இருந்து பின் வாங்குவதாக டம்பேரி அறிவித்தார். உடனடியாக…
நாடு முழுவதும் நிலவும் கோவாக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கோவிஷீல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி முதலில் ஹைதராபாத்தில் மட்டும் தடுப்பூசியை உற்பத்தி செய்துவந்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அகமதாபாத், பெங்களூர் நகரங்களிலுள்ள மையங்களிலும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கின. இந்நிலையில் பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சில தொகுதிகளின் கோவாக்ஸின் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டது. இதனால் தான் தட்டுப்பாடு நிலவுகிறது என என்.கே அரோரா தெரிவித்துள்ளார். முதல் இரண்டு தொகுதி கோவாக்ஸின் தயாரிப்பு மட்டும் தான்…
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் வலிமை படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில், சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் வலிமை படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனால் காலை முதலே சமூக வலைத்தளங்கள் களைக்கட்ட தொடங்கின. இரவில் பாடல் ரிலீசானதை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடல் நட்பு மற்றும் வாழ்க்கை ஆகியவை பற்றிய வரிகள் அனைவரையும் கவரும் வண்ணம் இடம் பெற்றுள்ளன.…
மும்பை சர்வதேச விமான நிலையம் , அதானி விமான நிலையம் என மாற்றியதற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்பை சர்வதேச விமான நிலையம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமம் கைப்பற்றியது. இதையடுத்து அதானி விமான நிலையம் என்ற எழுத்து பலகை வளாகத்தில் பொறிக்கப்பட்டன. இதனால் கடுப்பான சிவசேனா தொண்டர்கள், அதானி விமான நிலையம் என்ற பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மேலும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயர் மாற்றப்படுவதை ஏற்க மாட்டோம் என்று சிவசேனா கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வந்தார். சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்புரையாற்றினார். குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக கருணாநிதியின் படம் இடம்பெறுகிறது. முதலமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு நேர் எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கீழ் “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாஜக…
பாண்டா கரடிக்குட்டிகள் குரூப்பாக சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை உற்சாகத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள, அவைகளுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட பராமரிப்பாளர் வழிவகை செய்து வருகின்றன. அந்தவகையில் குட்டி பாண்டா கரடிகள் வசிப்பிடத்தில் நிறுவப்பட்டிருந்த மரத்திலான சறுக்குகளில் ஏறி குழந்தைகளை போல் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்கி விளையாடியன. இதனை கவனித்து வந்த பராமரிப்பாளர், படிக்கட்டு வழியாக ஏறத்தெரியாமல் சறுக்கியபடி கீழே விழுந்த பாண்டாக்குட்டி ஒன்றை, படிக்கட்டு வழியாக ஏறி சென்று, மேலிருந்து அதனை கீழே சறுக்க உதவி செய்துள்ளார்.
அஜித் நடிக்கும் வலிமை’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என அப்டேட்கள் வெளிவந்தன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என அப்டேட்களை அள்ளிதெளித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.அதையடுத்து வலிமை படத்தின் முதல் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 3-ம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் 3-ம்…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாஅங்கு படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மூன்று போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது இருந்த நிலையில் ஏற்கனவே 2 வழக்குகளில் கைதான அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது 3வது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.