- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்: தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு. தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு. காவல் துறைக்கு ரூ.8,930 கோடி. தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு. நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு. மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு. குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு. மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு. உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு. சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142…
கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த புதிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார் அதில் தொல்லியல் துறை மேம்பாடு குறித்த சில அறிவிப்புகள் வெளியிட்டார் அதன்படி சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும். அகழாய்வில் கண்டறியப்பட்டவற்றைப் பாதுகாக்க, அந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும். கீழடியில் உலகத் தரத்திலான திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும் கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – என்றும் கூறினார். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு…
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக சித்தரித்து தன்னை நித்யானந்தா வெளியிட்ட அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போதைய மதுரை ஆதீனத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் (அருணகிரி) ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார். இது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தில் 292…
கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணுவது உறுதி என்று பால்வள துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவடி அருகே திருமுல்லைவாலில் செயல்பட்டு வரும் விதையின் உதயம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என கூறினார். மேலும் எஸ்.பி.வேலுமணி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, அதே கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கவர்னரிடம் சென்று மனு கொடுத்திருந்தனர். தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறவர்கள் இவர்களின் செயலை என்ன சொல்லுவார்கள். தவறு செய்தவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே இந்த நடவடிக்கை…
நடிகர் விஜய், சிஎஸ்கே அணி கேப்டன் தோனியின் சந்திப்பை மதுரை ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடியுள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஒரு விளம்பர பட ஷூட்டிங்கும் ஒரே ஸ்டுடியோவில் நடந்த நிலையில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், மதுரையில் வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது . அதில் PM என…
தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்
ஓ.பி.சி., பிரிவுகளுக்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வரவேற்பு தெரிவித்து உள்ளார் .இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றி உள்ளது. சமூக நீதி பயணத்தில் இது ஒரு மைல்கல். மேலும் இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன்; ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள் என மத்திய அர்சினை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார் மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக்கூட்டம் நடத்த கூடாது என தமிழக அரசின் உத்தர்வை விமர்சித்துள்ள கமல்ஹாசன் முந்தைய ஆட்சியில் கிராம…
’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு
பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை 30ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொல்லியல்துறை பேராசிரியர் இள.இனியன் தலைமை ஏற்றுள்ளார். இந்த அகழ்வாய்வில் இது வரை கருப்பு சிவப்பு பானை ஓடுகள், உடைந்த சுடுமண் பகுதிகள், இரும்பு பொருட்கள், பல வண்ண மணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன தற்போது இந்த அகழாய்வில் இன்று தென்மேற்கு திசையில் உள்ள ஒரு குழியில் சுமார் இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் உள்ளளவு சுமார் அரை அடியைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. இந்தக் கால்வாய் சுமார் 2 அடி நீளத்துக்கு இருப்பதாகவும் அகழாய்வுக்குப் பிறகுதான் முழுமையாகக் கால்வாய் கட்டமைப்பு தெரியவரும் என தொல்லியல்…
தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ள நேரத்தில்,இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளியை குறைக்கும் வகையில் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை இருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை தொடர்ந்து சந்திப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள்…
யூடியூப் தளத்தில் ஆபாசமக பேசிய விவகாரத்தில் கைதானபப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். பப்ஜி மதன் வழக்கில் 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தகவல் உள்ளதாக கூறப்படுகிறது. 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றசாட்டியுள்ளனர்.
கொரோனா பரவல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், ஜன. 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆக.15 சுதந்திர தினம், அக். 02 காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஓரு வருடமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. . இந்த நிலையில்,வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பஞ்சாயத்து தலைவர்களுக்கு இது குறித்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தன் ட்விட்டர் பதிவில் கொரோனா பாதுகாப்பு விதிகளை…