“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

SHARE

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ள நேரத்தில்,
இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளியை குறைக்கும் வகையில் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை தொடர்ந்து சந்திப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களை சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதற்கு மீண்டும் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

அரசு வேலை வேண்டாம்… தனியார் வேலையாவது கொடுங்கள்… மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்…

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment