’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

SHARE

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை 30ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொல்லியல்துறை பேராசிரியர் இள.இனியன் தலைமை ஏற்றுள்ளார்.

இந்த அகழ்வாய்வில் இது வரை கருப்பு சிவப்பு பானை ஓடுகள், உடைந்த சுடுமண் பகுதிகள், இரும்பு பொருட்கள், பல வண்ண மணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன

தற்போது இந்த அகழாய்வில் இன்று தென்மேற்கு திசையில் உள்ள ஒரு குழியில் சுமார் இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் உள்ளளவு சுமார் அரை அடியைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. இந்தக் கால்வாய் சுமார் 2 அடி நீளத்துக்கு இருப்பதாகவும் அகழாய்வுக்குப் பிறகுதான் முழுமையாகக் கால்வாய் கட்டமைப்பு தெரியவரும் என தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் கூறியுள்ளார்

சங்க காலத்தில் மக்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்கோ, வெளியில் இருந்து தண்ணீரை உள்ளே கொண்டு வருவதற்கோ இந்தக் கால்வாயைப் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது

இந்தக் கண்டுபிடிப்பானது அனைத்துத் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விடத்தைப் பார்வையிடுவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடி அகழாய்வில் கிடைத்த குத்துவாள்..!!

Admin

உதடுகள் ஒட்டும் குறளும் ஒட்டாத குறளும்…

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது நான் ஏன் சாக வேண்டும்? – ஜோதிமணி பளார் கேள்வி

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

Nagappan

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

Leave a Comment