- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
இன்ஸ்டாகிராம் செயலியில் வரவுள்ள புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப்பில் செயலி போன்று மக்கள் அதிகம் பயன்படுத்து வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் மாறியுள்ளது. வாட்ஸ் அப்பில் எப்படி அப்டேட்கள் வழங்கி வருகிறார்களோ.. அவ்வாறு இன்ஸ்டாகிராமிலும் அப்டேட்கள் அள்ளி தெளித்து வருகின்றன.அந்த புதிய அப்டேட் குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களில் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பதட்டங்களால், அந்நாட்டுக்கு வழங்கி வந்த உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிலைமை பதற்றத்தில் உள்ளது. தாலிபான்களின் ஆட்சி விரைவில் ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலைமை மற்றும் குறிப்பாக பெண்களின் நிலைமை குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக வங்கியின் அதிகாரி, ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக கூறினார். இதனிடையே, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆப்கானிஸ்தானுக்கு 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்படும் இடம் குறித்து தவறாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும், ஆதாரம் இருந்தால், அந்த இடத்தை மாற்ற அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மற்றும் உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது பேசிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை மாற்றி, கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார். அப்போது பொங்கி எழுந்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னி குவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அது பென்னி குவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால், நிச்சயம் இடத்தை மாற்ற அரசு தயாராக உள்ளதாக விளக்கம் அளித்தார்.
கொரோனா தொற்றுப்பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் இருந்ததால் இந்த முடிவில் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு உறுதியாக செடம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படும் என்று அறிவித்து விட்டது. அதே சமயம், அங்கன்வாடி மையங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லையே என்று சமூக வலைதளங்களில் அப்போதே சலசலப்பு எழுந்தது. இந்நிலையில், செப்.1 முதல் அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. நெயில் பாலிஷ் போடுவது முதல் தடுப்பூசி போடுவது வரை கவனமாக நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க வேண்டும். 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல்…
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி, காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசிக்கும் சூர்யா தேவி டிக்டாக் செயலி மூலம் பிரபலமானர். அவரின் பொழுதுபோக்கே திரைப்பட நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களை கடுமையாக திட்டி வீடியோ வெளியிடுவது தான். இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன், ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான சிக்கந்தர் என்பவரை காலணியால் அடித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதற்கு சூர்யாதேவி மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சூர்யா தேவி தலைமறைவானார். இந்நிலையில் மதுரை காவல்துறை ஆணையருக்கு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, சூர்யா தேவி வீடியோ அனுப்பியுள்ளார். இதனால் உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார், சூர்யாதேவி நாடகமாடியதை அறிந்து கொண்டு, அட்வைஸ் செய்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் பிரபலமான பிக் பாஸ் (Biggboss) நிகழ்ச்சி அடுத்த சீசன் நடைபெறும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இதன் கூடுதல் தகவலாக, “பிக் பாஸ் சீசன் 5” புரோமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைவேன் என்று பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணே பங்கேற்றார். அப்போது உரையாற்றிய நாராயண் ராணே சுதந்திர தினத்தன்று முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். நாடு எப்போது சுதந்திரம் பெற்றது, என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் நின்றவர்களிடம் அவர் கேட்டு பேசியுள்ளார் என்று பேசிய நாராயண் ராணே. அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன்’ என்று பேசினார்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர் இடையை பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து, நாசிக் போலீசாரால் நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். நேற்றிரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன், ராணேவை…
பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று யூ-டியூபில் வெளியான நிலையில், பாஜக கட்சிப் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ-டியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்துப் பேசியது உண்மை. முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.…
2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2015ம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது. உண்மையை மூடி மறைக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். உண்மையை எவராலும் மறுக்க முடியாது. நடந்தவற்றை கூறினால்தான் உண்மை வெளிவரும். முன்னறிவிப்பு ஏதுமின்றி நவம்பர் 17ம் தேதி மற்றும் டிசம்பர் 2ம் தேதி இரவு நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அப்பாவி மக்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள். இதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்டது. திடீரென அதிக அளவில் தண்ணீரை திறந்தால் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் செயல்பட்டதாக கூறியுள்ள அழகிரி. நூற்றுக்கணக்கான உயிரிழப்பு…
கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ்,அண்ணன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் தம்பி விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்’ என கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கடந்த வாரம் ஊட்டியில் போலீசார் முன் ஆஜராகி மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய தீபு, சதீசன், சந்தோஷ்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் விஜயன், முனிரத்தினம் ஆகியோர் மனு ஒன்று தாக்கல் செய்தனர். athil, ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, முன்னாள் கலெக்டர் சங்கர், எஸ்பி முரளி ரம்பா, அதிமுக வர்த்தகர் அணி மாநில தலைவர்…