தாலிபான்களுக்கு தண்ணி காட்டும் தீவிரவாத அமைப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

SHARE

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு புதிய தலைவலியாக தீவிரவாத அமைப்பு ஒன்று அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் விலக்கி கொல்லப்பட்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் உயிர் வாழ பயந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைய விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்குன் ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வானொலிக்கு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேட்டியளித்துள்ளார். அதில் எங்களது படையினர் தங்கியிருக்கும் இடத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தாலிபான் குழுவினரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

அங்கு அவர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பால் ஆபத்து உள்ளதாகவும் ஜபியுல்லா கூறியுள்ளார்.

உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ எனப்படும் ‘கோராசன்’ பிரிவு என்பது குறிப்பிட்டத்தக்கது.

இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கும் தாலிபான் தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

Leave a Comment