- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
நமது நிருபர் 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் தனது செல்லாத நோட்டு நாவலுக்காகப் பெறுகிறார். இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 24 இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. இந்த விருதானது தாமிரப் பட்டயத்தையும் ரூ.1 லட்சம் தொகையையும் உள்ளடக்கியது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ நாவல் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெ.அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இமையம் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். எளிய குடும்பப் பின்னணியும் வலுவான இலக்கிய அறிவும் கொண்டவர். திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ – ஆகிய நாவல்களையும், பல்வேறு சிறுகதைகளையும் இவர்…
நமது நிருபர் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் ’சியான் 60’ படத்தில் பாபி சிம்ஹா இணைய உள்ளார். நடிகர் விக்ரம் தனது 60ஆவது படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்டு தற்போது ‘சியான் 60’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். முதலில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது பின்னர் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக மாற்றி அறிவிக்கப்பட்டது. சியான் 60 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் தனது பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட படங்களில் நடித்தவரும், நெருங்கிய நண்பருமான பாபி சிம்ஹா சியான் 60 படத்திலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் தற்போது அறிவித்து உள்ளார். அமைதியாகத் தொடங்கிய சியான் 60…
இராமாயணத்தை அதிகம் வாசிக்காத நபர்களுக்குக் கூட அதில் உள்ள காண்டங்கள் எனும் பெரும் பிரிவுகளைப் பற்றித் தெரியும். சுந்தர காண்டம் அவற்றில் மிகவும் புகழ்மிக்கது. இராமாயணத்தை வாசித்தவர்களுக்கு கம்பரின் இராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் இருப்பது தெரியும். இதன் தொடர்ச்சியாக ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக் கூத்தர் எழுதினார். ஆனால் ‘தியாகக் காண்டம்’ என்ற பெயர் அனைவருக்கும் புதிதானதாக, ஆச்சர்யம் தருவதாக இருந்திருக்கும். பலரும், ‘தியாக காண்டம் யார் எழுதியது?’ என்ற யோசனையிலும் இருப்பீர்கள். கம்ப இராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயரே தியாகக் காண்டம் என்பது ஆகும். இந்தக் காண்டத்தில் உள்ள தியாகங்களே இந்தப் பெயருக்குக் காரணங்களாக உள்ளன. அப்படி என்னென்ன தியாகங்கள் அயோத்தியா காண்டத்தில் நடந்தன? – வாருங்கள் பார்ப்போம்…. 1. தசரதன் தனது வாக்கைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத்…
சுடரொளி சுவையால், சமைக்கும் முறையால், சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களால் உணவுகள் வகைப்படுத்தப்படுவதைப் போல, உண்ணப்படும் முறையாலும் உணவு வகைப்படுத்தப்படுகின்றது. இப்போது காபி, டீ-யில் ஆரம்பித்து சாப்பாடு, பிரசாதங்கள் வரை அனைத்தையும் ‘சாப்பிட்டேன்’ என்று சொல்வதே வழக்கமாகிவிட்டது. ஆனால் உணவானது அது வயிற்றுக்குள் செலுத்தப்படும் முறையை வைத்து 4 விதங்களாகப் பிரிக்கப்படுகின்றது. ஸ்ரீமத் பகவத்கீதையின் 15ஆவது அத்தியாயமான புருஷோத்தம யோகத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ‘அன்னம் பசாமி சதுர்விதம்’ என்று உணவு உண்ணுதலில் நான்கு விதங்கள் உள்ளதாகவும், அந்த நான்கு வித உணவுகளையும் ஜாடராக்னியாக இருந்து தானே எரிப்பதாகவும் கூறுகின்றார். எவை அந்த 4 வகைகள்? வாருங்கள் அறிந்து கொள்வோம்… முதல் வகை பக்ஷ்யம் அதாவது பற்களால் கடித்து மென்று உண்பது. இரண்டாவது வகை சோஷ்யம் அதாவது உறிஞ்சி சாப்பிடுவது. மூன்றாவது வகை லேஹ்யம் அதாவது நாவால் நக்கி சாப்பிடுவது. நான்காவது வகை போஜ்யம் அதாவது கடிக்காமல் அப்படியே விழுங்குவது. இவற்றில் பக்ஷ்யம் என்பதை…
நமது நிருபர் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதியில் வெளியிடப்பட இருந்தநிலையில், தேர்தல் அறிவிப்பு காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இதனால் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என்றும் டுவிட்டரில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி இப்போது புதிய ரிலீஸ் தேதியை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி வரும் ரம்ஜான் தினத்தன்று டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையில், ரம்ஜான் அன்று டாக்டர் வருண் மற்றும் குழுவினரை சந்திக்கத் தயாராகுங்கள் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் படம் மெருகேற்றப்பட…
அமெரிக்கா நமது நிருபர். உலக அளவில் கொரோனாவின் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. தொடக்கம் முதலே கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலாத காரணத்தாலும் அமெரிக்க மக்கள் வேலை இழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரியில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தது. ’கொரோனாவில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளிப்போம்’ – என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்த ஜோ பைடன், அதற்காக ’கொரோனா நிவாரண நிதித் திட்டம்’ என்ற பிரம்மாண்ட மக்கள் நலத் திட்டத்தை அறிவித்தார். அமெரிக்காவில் உள்ள 85 சதவிகிதம் குடும்பத்தினருக்கு இந்த மாதத்திற்குள் தலா ஆயிரத்து நானூறு டாலர்கள் தொகையை அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி ஆகும். இதற்காக ஒரு லட்சத்து தொன்னூறாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஜோ பைடன்…
நமது நிருபர் 15 மாதங்களாக கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்த பிரதமர் மோடி இம்மாதம் மீண்டும் பயணம் செய்கிறார். இந்தியப் பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டுவரை பல்வேறு உலக நாடுகளுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஆனால் 2019ல் தலையெடுத்த கொரோனா அச்சம் காரணமாக அவரது அரசு முறைப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த 15 மாதங்களாக எந்த வெளிநாட்டிற்கும் இந்தியப் பிரதமர் மோடி பயணங்களை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி விரைவில் மீண்டும் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்க உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவின் அண்டைநாடும், 1971ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டால் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து உருவான நாடுமான வங்க தேசத்தின் 71ஆவது சுதந்திர தின விழா மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவே அதே நாளில் பிரதமர் மோடி15 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள…
புதுடெல்லி நமது நிருபர் 75ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்தார். மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்து அங்கு பேசினார். அப்போது அவர், நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடத்தப்படும் என்றும், இந்தக் கொண்டாட்டங்கள் மார்ச் 12ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கும் என்றும் அறிவித்தார். இந்தக் கொண்டாட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நமது நிருபர் யூடியூபில் சென்னை தமிழச்சி என்ற பெயரில் பிரபலமான பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பேரவைத் தேர்தலில் 136 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த வேட்பாளர் பட்டியலில் சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கல்வியாளர்கள் போன்ற மக்களுக்கு பரிச்சயமான பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுபவராக பிரபல யூடியூபரான சென்னை தமிழச்சி பத்மப்பிரியா அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு 2020 ல், தனது யூடியூப் சேனலில் மத்திய அரசின் ’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” வரைவு அறிக்கையை பற்றிய தகவல்களையும், இதனால் மக்களுக்கும், சுற்றுக்சூழலுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகளையும், பற்றி பேசிய ஒரு வீடியோவை இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். கோபத்தோடு இவர் பேசிய…
மியான்மர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்ல உத்தரவிட்டதால் ஒரு இராணுவ அதிகாரி இந்தியாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ளார். தமிழர்களுக்கு பர்மா என்ற பெயரில் பரிச்சயமான நாடுதான் மியான்மர். இங்கு அடிக்கடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்ப்பது உண்டு. தற்போதும் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அடக்குமுறைகள் நிறைந்த இராணுவ ஆட்சியை பர்மிய மக்கள் வெறுக்கிறார்கள். இதனால் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுவடைந்து உள்ளன. அதே சமயம் மியான்மரின் இராணுவமும் போராட்டக்காரர்கள் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்து வருகின்றது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கொல்ல தனது உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதனைச் செய்ய மனம் வராமல் குடும்பத்தோடு மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு வந்து அகதியாக தங்கி உள்ள ஒரு அதிகாரியின் கதை ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மியான்மரின் காம்பாட்நகரில் பிப்ரவரி 27ஆம் தேதியன்று போராட்டக் காரர்களை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவு தா பெங் என்ற…