அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

SHARE

தனது பெயரையும் புகைப்படத்தையும் அனுமதியின்றி பயன்படுத்திய செல்ஃபோன் செயலிக்கு காங். தலைவர் சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளாக்போர்ட் ரேடியோ என்ற ஆங்கில மொழி கற்பிக்கும் செல்போன் செயலியானது, தனது  விளம்பரத்தில் ’speak English as fluently as shashi tharoor’ என்று விளம்பரப்படுத்தி இருந்தது. அப்படி என்றால், ”சசி தரூர் போல சரளமாக ஆங்கிலம் பேசலாம்” என்பது அர்த்தமாகும்.

கொஞ்ச காலமாக நெட்டில் உலாவிக்கொண்டிருந்த இந்த விளம்பரத்தை ஒருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சசி தரூரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை கண்டதும் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சசி தரூர். ”இந்த செயலிக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, இதனை நான் அங்கீகரிக்கவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். வணிக நோக்கங்களுக்காக எனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் “ என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சசி தரூரின் இந்த பதிவுக்கு சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஒரு பயனர், ’அந்த விளம்பரத்தில் எடுத்துக்காட்டாகவே உங்களைப் பயன்படுத்தி உள்ளனர், இளைஞர்களை ஆங்கில மொழியின் திறமையான பேச்சாளர்களாக ஊக்குவிக்க முயற்சிப்பதே அந்த விளம்பரம்,  அவர்கள் உங்களை இழிவுபடுத்தவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு  பயனர் ’பிரபலங்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது வரம்பு மீறல்’ என்றும் பதிவிட்டுள்ளார். 

சசி தரூர் அரசியல் தலைவர் என்பதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் சிறந்த பேசாளர் மற்றும் எழுத்தாளர். அவரது எழுத்தில் வெளியான The Great Indian Novel, An Era Of Darkness, Why I Am a Hindu போன்ற புத்தகங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் பரவலான விற்பனையைப் பெற்றுள்ளன.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

பட்ஜெட் விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்கள்…!

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

வெறும் ரூ.500,700க்கு ஸ்மார்ட்போன் வாங்கலாம்- ஜியோவின் அடுத்த அதிரடி

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

Leave a Comment