Author: இரா.மன்னர் மன்னன்

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ். சேப்பாக்கம், சென்னை டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக அடித்து ஆடியது. அதனால் பவர் பிளே ஓவர்களிலேயே அந்த அணியால் 53 ரன்களை எடுக்க முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியும் சற்று போராடி விக்கெட்டுகளை எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியின் விஜய் சங்கர் ரோஷித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் முக்கியத்துவம் வாய்ந்த விக்கெட்டுகளை எடுத்தார். ஓரளவுக்கு நல்ல ஃபீல்டிங் செய்து மும்பை அணியின் ரன்ரேட்டை குறைத்தது சன்ரைசர்ஸ் அணி. இறுதியில் பொலார்ட் 35 ரன்கள் எடுக்க மும்பை இண்டியன்ஸ் அணியின் ஸ்கோர் 150 ஆனது. அடுத்து ஆட வந்த சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் நன்றாக ஆடியது. அதுவும் பேர்ஸ்டோ-வின் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ்…

Read More

டாக்டர்.க.குழந்தைசாமி, பொது சுகாதார வல்லுநர் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? பேசும் போது, சிரிக்கும் போது, இருமும் போது, தும்மும் போது மூச்சுத் திவலைகளுடன் கொரோனா வைரஸ் காற்றில் கலந்து அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது. காற்றில் பரவிய கிருமிகளும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் கைகளில் உள்ள கிருமிகளும் கதவு கைப்பிடிகள், மேஜை, ஸ்விட்சுகள், படிக்கட்டு கைப்பிடிகள், லிஃப்ட், நாற்காலிகள், வாகன இருக்கைகள் முதலான பல்வேறு வகையான பொருட்களின் மீது படிகின்றன. இது போன்ற இடங்களைத் தொட்டு விட்டு கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடும்பொழுது தொற்று ஏற்படுகிறது.  கொரோனா வைரஸ் தொற்றை எவ்வாறு தடுப்பது? கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தூரம் விலகி இருக்க வேண்டும். கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களை கிருமி நாசினி கொண்டு துடைத்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.…

Read More

சட்டமேதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ’பீமாராவ் ராம்ஜி அம்படவேகர்’ என்ற இயற்பெயரோடு 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இன்றைய மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் கிராமத்தில் பிறந்தார். (அவர் பிறந்த இடம் கடந்த 2003ஆம் ஆண்டில் ‘டாக்டர் அம்பேத்கர் நகர்’ – என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் தம்பதியினருக்கு 14 ஆவது குழந்தை அவர். மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட “மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பம் இவருடையது என்பதால், இவர் பள்ளியில் படிக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார். அந்தக் காலத்தில் மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார் என்றும், இதனால், தன்னுடைய குடும்பப் பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்படவேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று அண்ணல் மாற்றிக்கொண்டார் என்றும்…

Read More

ஐபிஎல் டி20யின் 4ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை: இது தான் டி 20 மேட்ச் என்பது போல் இருந்தது மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம். டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ்ஸின் தொடக்க ஆட்டகாரர்களாக கேஎல் ராகுலும் மயாங்கும் இறங்கினர். சக்காரியாவின் பந்துவீச்சில் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி போனார் மயாங் அகர்வால். பிறகு வந்த கெயில், கேஎல்ராகுலுடன் இணைந்து நல்ல ஆட்டத்தை கொடுத்தார். இந்த கூட்டணி அதிக ரன்களை குவித்தது. 10ஆவது ஓவரில் ரியானின் பந்துவீச்சில் அவுட் ஆனார் கெயில். அடுத்த சூப்பர் ஹூரோவாக களம் இறங்கினார் தீபக் ஹூடா. க்ருணால் பாண்டிவுடனான பிரச்சனையால் பரோடா அணியில் இருந்து நீக்கப்பட்ட வர்லாற்றைக் கொண்ட தீபக் ஹூடா, பழைய கோபமோ…

Read More

சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி 5 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட வந்துள்ள நிலையில், ’வெல்கம்தோனி – என்ற ஆஷ்டாக் டுவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தற்போதைய அணித் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதனால் தோனியின் ரசிகர்கள் அவர் எப்போது மீண்டும் களத்துக்கு வருவார்? – என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இன்று மும்பையில் நடைபெறும் ஐ.பி.எல். இரண்டாவது போட்டியில் சென்னை அணியின் தலைவராக தோனி மீண்டும் களம் திரும்பி உள்ளார். இதனையடுத்து ‘welcomedhoni’ என்ற ஆஷ்டாக் விளையாட்டுப் பிரிவில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது. தோனியை டுவிட்டரில் 82 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நிருபர்.

Read More

சிலிண்டர்களை வாட்ஸப் மூலம் பதிவு செய்யும் புதிய வசதியை கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. சிலிண்டர் தீர்ந்து போனால் முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் தங்கள் முகமைக்கு போன் செய்து வாடிக்கையாளர் எண்ணைக் கூறி அடுத்த சிலிண்டரை பதிவு செய்து வந்தனர். பின்னர் ஐ.வி.ஆர்.எஸ். சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து ஐ.வி.ஆர்.எஸ். எண்ணைத் தொடர்பு கொண்டு, அதில் கேட்கும் பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படி சிலிண்டரை பதிவு செய்ய முடிந்தது. தற்போது இந்த வசதிகளின் அடுத்த கட்டமாக வாட்ஸப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து சிலிண்டர் நிறுவனங்களின் வாட்ஸப் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். ஹெச்.பி. நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் 92222 01122 என்ற எண்ணுக்கு BOOK என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பாரத் கேஸ் நிறுவனத்தின் சிலிண்டர்களை…

Read More

நடந்து முடிந்த தமிழக பேரவைத் தேர்தலுக்கான சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பேரவைத் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலகட்டத்தில், முறைகேடான பணப் பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் முடிவடைந்தபோது தமிழகமெங்கும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு பறக்கும் படைகளால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 445 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளன. முன்னதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பறக்கும் படைகள் 130.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி இருந்தது. அதனோடு ஒப்பிட்டால் இப்போது கைப்பற்றப்பட்டவையின் மதிப்பு 340% அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நமது நிருபர்.

Read More

உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்றில் மியான்மர் நாட்டு அழகி அந்நாட்டில் நடந்துவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ என்ற சர்வதேச அழகிப்போட்டி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் வெற்றி பெற்றவர்களின் இறுதிச் சுற்று தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றது. இதில் மியான்மர் நாட்டின் சார்பில் கலந்து கொண்ட 22 வயது கல்லூரி மாணவி ஹான் லே என்பவர் நிகழ்வின் மேடையில் ஆற்றிய உரை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த உரையில் அவர், மியான்மன்ர் நாட்டில் இராணுவம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து மக்களைக் கொன்று குவித்துவருவதாகவும், மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து போராடி வருவதாகவும் கூறினார். அத்தோடு சர்வதேச அளவில் உதவிகள் தேவைப்படும் நிலையில் மியான்மர் உள்ளதால் அனைவரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் தோனியின் ஆலோசனை பலன் கொடுத்தது என்று யாக்கர் நடராஜன் புகழாரம். இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான இளம் பந்து வீச்சாளர் நடராஜன். இவரது யாக்கர் பந்து வீச்சு சிறப்பாக இருந்த காரணத்தாலும் கடந்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிகபட்சமாக 71 யாக்கர்களை வீசிய பந்துவீச்சாளர் இவர் என்பதாலும், யாக்கர் நடராஜன் என்றே இவர் அழைக்கப்பட்டு வருகின்றார். தற்போது தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார். யாக்கர் நடராஜன் கடந்த ஐ.பி.எல். தொடரில் தோனி தனக்கு அளித்த ஆலோசனை பற்றி கூறும்போது, கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய போது கேப்டன் தோனி எனது பந்தை 102 மீட்டர் தூரத்துக்கு சிக்சராக விளாசினார். அதற்கு அடுத்த பந்திலேயே நான் அவரை ஆட்டமிழக்க வைத்தாலும், கடந்த பந்து எப்படி சிக்சர் போனது? என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப் போட்டிக்குப்…

Read More

சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டு அறிக்கையானது நடப்பாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக இருக்கும் என்று கணித்துள்ளது. வாஷிங்டன். இந்த ஆண்டுக்கான உலக வங்கியின் வசந்தகால கூட்டத் தொடர் தொடங்க இருப்பதை முன்னிட்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பீட்டு அறிக்கையை சர்வதேச நிதியம் வெளியிட்டு உள்ளது. இந்த 2021-22ஆம் நிதியாண்டில் உலக நாடுகளின் உள்நாட்டு உற்பத்திகள் எந்த அளவில் இருக்கும் என்பதை இந்த மதிப்பீட்டு அறிக்கை முன்கூட்டியே கணித்து உள்ளது. இதன் கணிப்புகளின்படி, 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமானது 12.5% இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியான முந்தைய கணிப்பான 11.5% என்பதை விடவும் 1% அதிகம் ஆகும். கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 3.3% சரிவைக் கண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 6% உயர்வைக் சந்திக்கும்…

Read More