200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

SHARE

ஐபிஎல் டி20யின் 4ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை:

இது தான் டி 20 மேட்ச் என்பது போல் இருந்தது மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம். 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ்ஸின் தொடக்க ஆட்டகாரர்களாக கேஎல் ராகுலும் மயாங்கும் இறங்கினர். சக்காரியாவின் பந்துவீச்சில் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி போனார் மயாங் அகர்வால். பிறகு வந்த கெயில், கேஎல்ராகுலுடன் இணைந்து நல்ல ஆட்டத்தை கொடுத்தார். இந்த கூட்டணி அதிக ரன்களை குவித்தது. 10ஆவது ஓவரில் ரியானின் பந்துவீச்சில் அவுட் ஆனார் கெயில்.  

அடுத்த சூப்பர் ஹூரோவாக களம் இறங்கினார் தீபக் ஹூடா.  க்ருணால் பாண்டிவுடனான பிரச்சனையால் பரோடா அணியில் இருந்து நீக்கப்பட்ட வர்லாற்றைக் கொண்ட தீபக் ஹூடா, பழைய கோபமோ என்னவோ அடித்து நொறுக்கினார். 18வது ஓவரில் மோரிஸ்ஸின் பந்தில் அவுட் ஆனார் ஹூடா. பிறகு பூரன், ஷாருக், ஜூய் என்று அடுத்தடுத்த வீரர்களும்  சில ரன்களிலேயே வெளியேறினர். 

கேஎல்ராகுல் மட்டுமே முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரைக்கும் ஆடி 50 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் சக்காரியாவின் பந்தில் ஆட்டம் இழந்தார். கேஎல்ராகுல், அகர்வால், கெயில், ஹூடா, ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 221 ரன்கள் எடுத்து  20 ஓவர்களை முடித்தனர் பஞ்சாப் கிங்ஸ் அணியினர்.

20 ஓவரில் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி – என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோரா இறங்கினர். இவர்கள் அதிரடியாக ஆடி ரன்களை எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருவருமே சில ரன்களிலேயே வெளியேறினர். 

அடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்ஸின் புது கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி ரன் எடுத்தார். அடுத்தடுத்து வந்த பட்லர், டூபே, பராங், திவாட்டியா அனைவரும் சீக்கிரமே வெளியேறினாலும், சாம்சன் எதற்கும் அசராமல் நின்று விளையாடினார். கடைசி ஓவர் வரைக்கும் எப்படியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயித்து விடும் என்றே ரசிகர்கள் நம்பினர், ஆனால் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொள்ள ரன் எடுக்க  ஓடாமல் இருந்தார் சாம்சன். 

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி,  அபவுண்டரி எடுத்தால் சூப்பர் ஓவர் வழங்கப்படலாம் என பல குழப்பங்கள் ரசிகர்களுக்கு எழ, இறுதி வரை ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கடத்தி கடைசி பந்தை சிக்ஸருக்காக தூக்கி அடித்து அவுட்டாகி ஆட்டத்தின் வெற்றியை பஞ்சாப் கிங்ஸ்க்கு கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 

சென்ற டி20 லீக் போட்டியை காட்டிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு அணியுமே புது வேகத்துடனே விளையாடினர். இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் இது ஒரு சூப்பரான அதே சமயம் பரபரப்பான மேட்சாகவே இது அமைந்தது.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு வருகின்றதா?: மருத்துவர்கள் கூறுவது என்ன?

Nagappan

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

Leave a Comment