Author: இரா.மன்னர் மன்னன்

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் 39 வயது பெண் இயக்குநரான க்ளோயி சாவ். லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 3 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற திரைப்படம் நோமேட்லாண்ட். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை – என்று இந்தத் திரைப்படம் வென்ற பிரிவுகள் மூன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் க்ளோயி சாவ் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றதன் மூலம் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து உள்ளார். ஆஸ்கர் விருதின் 93ஆண்டு கால வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது பெண் இவர் என்பதோடு, வெள்ளை இனத்தவர் அல்லாத ஒருவர் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதன் முறையாகப் பெற்றார் – என்ற சாதனையையும் இவர் சாத்தியப்படுத்தி உள்ளார். இவர் இதே படத்திற்காக இதற்கு முன்னதாகவே கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இத்தனைக்கும் க்ளோயி சாவ்-க்கு…

Read More

திரைப்படத் துறையின் உயரிய சர்வதேச விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 93ஆவது ஆஸ்கர் விருதுகளை வழங்கும் விழா இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடக்க இருந்தது, பின்னர் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்டு நேற்று நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா நிகழ்ச்சித் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்படம் சார்ந்த 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. நோமேட்லாண்ட் திரைப்படம் விருதுகளை வாரிக் குவித்தது. சிறந்த திரைப்படம் விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது, சிறந்த இயக்குநருக்கான விருதை இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார், சிறந்த நடிகைக்கான விருது இதே திரைப்படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்ட்-க்கு வழங்கப்பட்டது. இப்படியாக மூன்று முக்கிய விருதுகளை இந்தத் திரைப்படம் வென்றது. பிளாக் பாட்டம் திரைப்படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் பிரிவில் இந்தத் திரைப்படத்திற்காகப் பணியாற்றிய லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்…

Read More

ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிகள் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சேப்பாக்கம், சென்னை டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெளலிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி, முருகன் அஷ்வினுக்கு மாற்றாக ரவி பிஷ்னோய்யை இந்த போட்டியில் களம் இறக்கியுள்ளனர். ஆரம்பம் முதலே தடுமாறியது மும்பை இண்டியன்ஸ் அணி. டிகாக் மற்றும் ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர். ஆட்டத்தின் 2ஆவது ஓவரிலேயே ஹூடாவின் பந்தில், டிகாக்கின் விக்கெட் போனது. அடுத்து சூர்யகுமார் வருவார் என்று பார்த்தால், மிடில் ஆர்டர் பிளேயர் ஆன கிஷன் வந்தார். சரி கிஷனுன், ரோஷித்தும் அடித்து ஆடுவார்கள் என்று எதிர்ப்பார்த்தால், சிங்கிள் எடுக்கவே திணறியது மும்பை. பவர்பிளே ஓவர்களில் மொத்தமே 21 ரன்கள்தான் எடுத்தது. இந்த ஐபிஎல் லீக் போட்டியின் குறைந்த…

Read More

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, தொடர் வெற்றியைத் தக்க வைத்தது.. வான்கடே, மும்பை டாஸ் வென்ற கோலி, சஞ்சுவை பேசச் சொல்லி நகர்கிறார். சில வினாடிகளுக்கு பிறகு அட நான் தான டாஸ் ஜெயித்தேன் என்று சுதாரித்து, பிறகு தான் நாங்கள் பெளலிங்கை தேர்வு செய்கிறோம் என்று கூறினார் சஞ்சு. டாஸில் தடுமாறியவர் ஆட்டத்தில் தடுமாறவே இல்லை, இந்த வருடத்தின் ஐபிஎல் சாம்பியன் நாங்கள் தான் என்று இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் தொடர் வெற்றியை கைப்பற்றி, முதல் இடத்தில் இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த போட்டியில் ரஜத் படிதர்க்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் உடன் களம் இறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ்…

Read More

ஐபிஎல் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழத்தி வெற்றி பெற்றது. வான்கடே, மும்பை கொல்கத்தா அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இரண்டு அணிகளும் சில மாற்றங்களோடு களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ப்ராவோக்கு மாற்றாக எங்கிடியை கொண்டு வந்தனர். அதேபோல் கொல்காத்தா அணியில் ஹர்பஜனுக்கு மாற்றாக நாகர்கோட்டியையும், சகிப் ஹல் ஹசனுக்கு மாற்றாக சுனில் நரைனையும் கொண்டு வந்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் டுப்ளஸி வந்தனர். கெய்க்வாட் முந்தைய ஆட்டங்களில் சரியாக விளையாடாததால் இந்த மேட்ச்சில் இவரையும் மாற்றி இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் நம்பிக்கை வைத்து கெய்க்வாட்டை ஆட வைத்தார் தோனி. அதற்கு பலனும் கிடைத்தது. ருதுராஜ் கெய்க்வாட் ரொம்ப முக்கியமான பகுதி பவர்பிளே ஓவர்களில்…

Read More

ஐ.பி.எல் லீக்கில் நேற்று நேற்று மும்பை இண்டியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. சேப்பாக்கம், சென்னை டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் டிகாக் களம் இறக்கப்பட்டனர். மூன்றாவது ஓவரிலேயே 2 ரன்களோடு ஸ்டாய்னிசின் பந்தில் வெளியேறினார் டிகாக். ரோஹித் ஷர்மா பந்துகளை பார்த்து ஆடி 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸரோடு 44 ரன்கள் எடுத்து அமித் மிஷ்ராவின் பந்துவீச்சில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் கொடுத்து, ஆவேஷ் கானின் பந்தில் வெளியேறினார். மும்பைக்கு ரன் குவிக்க முயற்சித்த ஹிர்திக் பாண்டியா டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த க்ருணால் பாண்டியா மற்றும் பொலார்ட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெயத் யாதவ் ஓரளவுக்கு நன்றாக ஆடி 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி மொத்தம் 137…

Read More

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளுக்கு நடுவே உள்ள வேறுபாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் போது அடுத்தடுத்து கொரோனாவின் புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாசனையை உணர முடியாமல் போவது, தலைவலி, தொடர் இருமல், மூட்டு வலி ,தொண்டை வலி, தசை வலி, உடல் அசதி போன்ற அறிகுறிகள் பரவலாக ஏற்பட்டன. அயல்நாடுகளில் உடலில் சிகப்புப் புள்ளிகள் தோன்றுவது உள்ளிட்ட இன்னும் சில அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் இரண்டாவது அலையில் அதிகம் வெளிப்படவில்லை என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கை. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நபர்களில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்கிறது…

Read More

ஐபிஎல் லீக்கின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. வான்கடே, மும்பை. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்பிளஸி களம் இறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே முஸ்தாபிஃசூரின் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார் கெய்க்வாட். முந்தைய சில போட்டிகளிலும் கெய்க்வாட்டின் ஆட்டம் சொல்லும்படி இல்லை. இதனால் அடுத்த போட்டிகளில் அவர் தொடர்வாரா என்பது, இந்த மேட்ச்சிலே பேசப்பட்டது. ஆனால் டூப்பிளஸி, உனத்கட் டின் ஓவரில் தாறுமாறாக பந்துகளை தூக்கி எறிந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என ரன்களை குவித்தார். அவரது ஆட்டமும் அடுத்த வந்த மோரிஸ் பந்துகளில் முடிந்துவிட்டது. பவர்பிளே ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் போனது. அடுத்து வந்த மொயின் அலி,…

Read More

ஐபிஎல் லீக் போட்டியின் நேற்றைய 2வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை விழ்த்தி வெற்றி பெற்றது. வான்கடே, மும்பை டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய கேஎல் ராகுல், மற்றும் மயங் அகர்வால் நல்ல ஆட்டத்தை கொடுத்து இருவரும் 12 ஓவர் வரை பார்ட்னர்ஷிப்பில் விளையாடினர். மயங் அகர்வால் அதிரடியாக ஆடி முந்தைய போட்டிகளில் ஆட முடியாமல் போனதை இந்த போட்டியில் சரி செய்து பந்துகளை தெறிக்க விட்டார். வோக்ஸ், ரபாடா, லலித் என அனைத்து பந்துவீச்சாளர்களையும் திறமையாக எதிர்கொண்டார் விட்டார் மயங். ஆட்டத்தின் 13வது ஓவரில் மேரிவாலா பந்துவீச்சில் மயங் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேஎல் ராகுல் நிதானமாக ஆடி தனது 33 வது அரை சதத்தை கடந்தார்.…

Read More

ஐபிஎல் லீக் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதினர். இதில் அபாரமான ஆட்டம் தந்து ஹாட்ரிக் வெற்றி அடைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. சேப்பாக்கம், சென்னை டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் கோலி களம் இறங்கினார்கள். ஆனால் ஆட்டத்தின் 2 வது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார் கோலி. அதற்கு பிறகு வந்த ரஜத்தின் விக்கெட்டும் அதே ஓவரில் போனது. கோலியின் விக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தாலும் அதற்கு பிறகு தான் ஆட்டமே களைகட்டியது. அடுத்து ஆட வந்த மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை தந்தார். மேக்ஸ்வெல் மற்றும் படிக்கல் இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். மேக்ஸ்வெல் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என்று தெறிக்கவிட்டார். இவர்களின் பார்ட்னர்ஷிப் பிரஷித்…

Read More