- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டெல்லி டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் செய்வதாக கூறியது. புது கேப்டன்சியின் கீழ் சன்ரைசர்ஸ் அணி வார்னர், சுசித், கவுல் ஆகியோருக்கு மாற்றாக நபி, புவனேஷ்வர், சமத் ஆகியோருடன் களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியும் உனத்கட், சிவம்டூபே க்கு மாற்றாக தியாகி, அனுஜ் ரவாட் ஆகியோரைக் களம் இறக்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால். மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்ந்தது. ரஷித் கானின் ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து, எல்பிடபிள்யூ வில் வெளியேறினார் ஜெய்ஸ்வால். அடுத்து பட்லருடன் கைக்கோர்த்தார் சஞ்சு சாம்சன். பவர்பிளே ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் ஆட்டமே பவர்பிளேவிற்கு பிறகுதான்…
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டெல்லி டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா இரண்டு மாற்றங்களுடன் ஃபீல்டிங் செய்வதாக கூறினார். மும்பை அணியில், ஜெயந்த் யாதவுக்கு மாற்றாக ஜிம்மி நீஷமையும், நாதன் கூல்டர் நைலுக்கு மாற்றாக குல்கர்னியும் களம் இறக்குவதாகக் கூறினார். தல தோனி எந்த மாற்றமும் இல்லாமல் அதே ப்ளேயிங் லெவனோடு விளையாடுவதாக கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸி. வந்த வேகத்திலேயே போல்டின் முதல் பந்துக்கு பவுண்டரி அடித்து, இரண்டாவது பந்துக்கு கேட்ச் ஆகி வெளியேறினார் கெய்க்வாட். அடுத்து வந்த மொயின் அலியால் ஆட்டம் களை கட்டியது. குல்கர்னியின் பந்தில் பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்கவிட்டார் டூப்ளஸி.…
இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற ஜெகதீஷ் லாட் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத், வடோதரா இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரண்டாம் அலை எவ்வளவு மோசமானது என்பதை உணர்த்தும் வகையில் ஆணழகன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மகாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்ட 34 வயதான ஜெகதீஷ் லாட் 2 முறை இந்திய ஆணழகன் பட்டம் வென்றவர் மற்றும் உலக சாம்பியன்ஷிப் ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சொந்த உடற்பயிற்சி கூடம் தொடங்க குஜராத் மாநிலம் வடோதராவில் குடியேறினார். கொரோனா தொற்றால் மூச்சு விட சிரமப்பட்ட இவர் வடோதராவில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜெகதீஷ் லாட் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்தார். 45 வயதுக்கு மேட்பட்டவர்கள்,…
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அகமதாபாத் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பவுலிங் செய்வதாக கூறியது. இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில், வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக ஷாபாஸ் விளையாடுவதாகவும், பஞ்சாப் கிங்ஸ் அணியில், காயம் காரணமாக மயாங் அகர்வால் இல்லை, ஹென்றிக்ஸ், அர்ஷ்தீப் அவர்களுக்கு மாற்றாக ப்ரப்சிம்ரன், ஹர்ப்ரீத் விளையாடுவதாகவும் தெரிவித்தனர். கேஎல் ராகுல். ப்ரப்சிம்ரன் உடன் கள இறங்கி நல்ல தொடக்கம் தந்தார். 4ஆவது ஓவரில் ப்ரப்சிம்ரன் அவுட்டாகி விட கெயில் உடன் கூட்டணி சேர்ந்தார் ராகுல். அட்டகாசமான கூட்டணி, ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கினர். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்க விட்டார் ராகுல். ஆட்டத்தில் கேஎல் ராகுல்…
நாடெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரளா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன் நிற்கிறது. தற்போது கேரளத்தில் ‘ஆக்சிஜன் வார் ரூம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நம் அண்டை மாநிலமான கேரளா போதுமான அளவு ஆக்ஸிஜனை முன்கூட்டியே திட்டமிட்டு கையிருப்பு வைத்து நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது. கொரோனாவின் முதல் அலையிலேயே கேரளா கூடுதல் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விட்டதாகவும் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை தொடர்ந்து உறுதி செய்து வந்ததாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள, தேவையான ஆக்ஸிஜன் கேரள மருத்துவமனைகளிலும் உள்ளதாகவும். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டு வைத்துள்ளதாகவும் கேரளி சுகாதாரத்துறை அதிகாரி…
கொரோனாவில் இருந்து மீண்ட இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது. மெரோன், இஸ்ரேல் இஸ்ரேல் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மெரோன் நகரில் வருடம் தோறும் நடைபெறும் யூத மத விழாக்களில் ஒன்றான லாகோம்-போமர் விழா இந்த ஆண்டும் நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் கொண்டாட்டங்களில் யூத மக்கள் கையில் தீப்பந்தத்தை ஏந்தி பங்கேற்பார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இம்முறை பெரும்பாலாக மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் இஸ்ரேலில் கொரோனா பெருமளவு குறைந்து விட்டதால் மெரோன் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முக்கியமான விழா என்பதால் இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி முச்சுத் திணறி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். மக்கள் அமர்ந்திருந்த ஸ்டேடியத்தின்…
ஐபிஎல் லீக்கின் நேற்றைய போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அகமதாபாத் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், பவுலிங்கை தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் காயம் காரணமாக அமித் மிஷ்ராவிற்கு மாற்றாக லலித் யாதவை அணியில் சேர்த்திருந்தார்கள். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் ராணா மற்றும் கில். ஆரம்பமே சரியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் மூன்று ஓவர்களுக்கு சிங்கிள்ஸ் மட்டும் உருட்டிக்கொண்டிருந்த ராணா, 4 வது ஓவர் அக்ஷரின் பந்தில், அவுட்டாகி சென்றார். அடுத்து வந்த ராகுல் த்ரிப்பாட்டி, மற்றும் கில் கூட்டணி மெதுவாக ஆட ஆரம்பித்தனர். இவர்களை ஆடவே விடக்கூடாது, விக்கெட் எடுத்தாக வேண்டும் என்று வந்தார்கள் ஆவேஷ், இஷாந்த், அக்ஷர்,…
அரசு விழாவில் முகக் கவசம் போட மறந்த பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு தாய்லாந்தில் நடந்துள்ளது. பாங்காக், தாய்லாந்து. உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் முகக் கவசம் அணியாத பொது மக்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 47 ஆயிரம்) வரை அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல், தலைநகர் பாங்காக்கில் ஒரு அரசு விழாவில் பங்கேற்க, அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பொதுமக்கள் ”எங்களுக்கு ஒரு நியாயம், பிரதமருக்கு ஒரு நியாமா?” என பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பாங்காங் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் பிரதமருக்கு 6,000 பாட் (இந்திய மதிப்பில் 14,000 ரூபாய்) அபராதம் விதித்துள்ளார். பிரியா வேலு
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்களில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசியின் முழுமையாக தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை எனவும் திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அணிவகுப்புகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் வேறு விதமான பொது நிகழ்வுகளில் முகக்கவசம் இல்லாமல் கலந்து கொள்ளலாம் என அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி அறிவித்துள்ளது. அதே நேரம், முடி திருத்தும் நிலையங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்கங்கள், திறந்தவெளி அல்லாத இடங்கள், மூடிய வளாகங்கள் மற்றும் அறைகள், அதிக மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் முகக்கவசங்கள் கட்டாயம் என்றும் சிடிசி வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆன நபர்களுக்கே இத் தளர்வுகள் பொருந்தும் எனவும் அளித்துள்ளது. அமெரிக்காவில் ஒட்டுமொத்த…
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் இச்சூழலில் தங்கள் உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான விளைவுகளை உருவாக்கி உள்ள நிலையில், வட மாநில மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவின் நிலையைக் கண்டு பல நாடுகள் உதவி செய்ய முன் வந்த நிலையில் ஐநா சபையும் தனது உதவி கரத்தை நீட்டி இருந்தது. ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டதாக தனது வருத்தத்தை ஐ.நா. வெளியிட்டு உள்ளது. இந்தியாவுக்கு கொரோனா சிகிச்சைக் கருவிகளை வழங்க ஐ.நா. தயாராக இருந்ததாகவும். ஆனால் இந்திய அரசு தற்போது போதுமான மருத்துவக் கருவிகள் உள்ளதால் ஐ.நா.வின் உதவியை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்-சின் துணை செய்தி தொடா்பாளா் பர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ஐ.நா. தனது உதவியை…