இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

SHARE

இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற ஜெகதீஷ் லாட் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத், வடோதரா

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரண்டாம் அலை எவ்வளவு மோசமானது என்பதை உணர்த்தும் வகையில் ஆணழகன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். 

மகாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்ட 34 வயதான ஜெகதீஷ் லாட் 2 முறை இந்திய ஆணழகன் பட்டம் வென்றவர் மற்றும் உலக சாம்பியன்ஷிப் ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றவர். 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சொந்த உடற்பயிற்சி கூடம் தொடங்க குஜராத் மாநிலம் வடோதராவில் குடியேறினார். கொரோனா தொற்றால் மூச்சு விட சிரமப்பட்ட இவர் வடோதராவில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜெகதீஷ் லாட் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்தார். 

45 வயதுக்கு மேட்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் போன்றவர்களை மட்டுமே கொரோனா பலி கொள்ளும் என்று மக்களில் பலர் நம்பி வந்த நிலையில், முழு உடல் தகுதி பெற்ற இளைஞர், அதிலும் உலக அளவில் ஆணழகன் பட்டம் பெற்றவர் தற்போது கொரோனாவுக்கு பலியாகி உள்ள சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.

  • பிரியா வேலு 

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

Leave a Comment