- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
TablePlus Mac Crack ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி கிடைத்து உள்ளது. இதனால் தெரியவரும் தொல்லியல் செய்திகள் என்னென்ன என்று பார்ப்போம்… இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு நடந்த இடம் தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் ஆகும். கி.பி.1876ஆம் ஆண்டில் இங்கு முதன்முதலாக அகழாய்வு நடந்தது. பின்னர் ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகளை மேற்கொண்டனர். சுதந்திர இந்தியாவில் நெடுங்காலமாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் தொல்லியல்துறை 2004-2005ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தியது, ஆனால் அகழாய்வு அறிக்கை நெடுங்காலமாக வெளியாகவில்லை. ஆதிச்ச நல்லூரில் 3800 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டும் ஆய்வு அறிக்கை வெளியாகவில்லை என்பதால் சர்ச்சை எழுந்தது. இது பற்றி வழக்கும் தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற விசாரணையின்போது ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட 2 ஆய்வு மாதிரிகளின் ஆண்டுகளை மட்டும் மத்திய தொல்லியல்துறை வெளியிட்டது. அதனால் முதல் மாதிரி கி.மு.…
Valhalla VintageVerb VST Crack ‘வட இந்திய இளைஞர்களைப் பார்த்து நாடே பெருமைப்படுகிறது’ – என்று சிலகாலம் முன்பு சொன்னார் பிரதமர் மோடி. இன்று அதே வட இந்திய இளைஞர்களால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டு உள்ளன. 300க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நாடெங்கும் வன்முறையின் அலை வீசுகின்றது, இதன் பின்னாக உள்ளது அக்னிப்பாதை (இந்தியில் அக்னிபாத்) – என்ற திட்டம். இளைஞர்களின் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?. தொடர் வன்முறைகளுக்குத் தீர்வு என்ன? – வாருங்கள் பார்ப்போம். முப்படைகளில் 4 ஆண்டு கால தற்காலிக சேவை என்ற திட்டம் என்று அக்னிபாத்தை சுருக்கமாகக் கூறலாம். அதாவது 4 ஆண்டுகளுக்கு இராணுவத்தில் வேலை இருக்கும். பின்னர் 75% பேர் இராணுவத்தில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு தொகை மட்டும் கொடுக்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்ட காலப் பலன்கள் இருக்காது. இந்தப் புதிய திட்டத்திற்கான விதை எங்கே போடப்பட்டது என்று பார்த்தால்…
தமிழகத்தில் மிகவும் முற்காலத்திலேயே இரும்புக் கொல்லர்கள் வாழ்ந்த பகுதி ஆதிச்ச நல்லூர். ஆதி தச்ச நல்லூர் – என்பது மருவி ஆதிச்சநல்லூர் என மாறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பானைகள், எலும்புகள், இரும்புக் கருவிகள், வெண்கலக் கருவிகள், தங்கத் தகடுகள் – உள்ளிட்ட தமிழர் வரலாற்றுப் பொருட்கள் நிறைய கிடைத்துள்ளன. ஆதிச்ச நல்லூரில் தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் மிக முக்கிய கண்டுபிடிப்பாக சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஒன்று தற்போது அங்கு கிடைத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் சதுரமான தொட்டிக்குள் நான்கு ஆமைகள் உள்ளன. அவற்றோடு யானை, மரம் மற்றும் மீன்களின் உருவங்களும் காணப்படுகின்றன. காசின் பின்பகுதியில் மீன் சின்னம் தெளிவாக இல்லை. இந்தவகையான நாணயங்களை சங்ககாலப் பாண்டிய அரசர்கள் மட்டுமே வெளியிட்டு உள்ளனர், அதனால் இதனை சங்ககாலப் பாண்டியர் காசு – என ஆய்வாளர்கள் உறுதி செய்து…
நாம் பயணிக்கும் போது கையில் கொண்டு போகும் பொருட்களை மறந்து விட்டு வருவது இயல்புதான். அப்படி தொலைத்த பொருளை மீட்க ஒருவர் செய்த செயல்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நந்தன் குமார் என்ற கணினிப் பொறியாளர் இண்டிகோ விமனத்தில் பயணம் செய்யும் போது அவர் கையில் ஒரு பெட்டியைக் கொண்டு சென்று உள்ளார். அங்கு அதே மாதிரியான பெட்டியை வேறு ஒரு பயணியும் கொண்டு வந்ததை அவர் பார்க்கிறார். எதிர்பாரத விதமாக அந்த இந்னொரு பயணி இவரது பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். உடனே பதற்றமடைந்த நந்தன்குமார் இண்டிகோ விமான அலுவகத்தில் புகார் கொடுத்து, தனது பையிள் மேலே ஒட்டப்பட்டுள்ள பி.என்.ஆர் எண்னை அதிகாரியிடம் சொல்லி, பெட்டியை விரைவாகக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டார். ஆனால் அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டார்கள். இதனால் கோவமும் வெறுப்பும் அடைந்த அந்த நந்தன் குமார் ‘எனது பெட்டியை நானே கண்டுபிடித்து…
தமிழக தொல்லியல்துறையினர் தமிழகத்தில் 7 இடங்களில் புதிதாக அகழாய்வுகளைத் தொடங்கி உள்ளனர். அந்த இடங்களில் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் உள்ள தொல்லியல் மேடும் ஒன்று. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 30 மீட்டர் ஆழத்தில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கத் தொடங்கின. இப்போது வெம்பக் கோட்டை தொல்லியல் மேட்டில் 70 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 100 மீட்டர் ஆழம் வரை தோண்டும் போது தொல்தமிழரின் வாழ்வியலோடு தொடர்புடைய பொருட்கள் இங்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெம்பக் கோட்டையில் இதுவரையிலான அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களின் படங்களைப் பகிர்ந்து உள்ளார். இந்த கீச்சைப் பலரும் மறு பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசின் சாலைப் போக்குவரத்துத் துறையால் தொலைதூர வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், வழியில் உணவு இடைவேளைக்காக உணவகங்களில் நிற்பது வழக்கம். மிகப் பெரும்பாலும் அப்படியாக நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் விலை மிக மிக அதிகமாகவும், உணவின் தடம் மிக மிக மட்டமாகவும் இருக்கும். ஆனால் ஒரு வெளிப்படையான ஊழலாக போக்குவரத்துத் துறையில் உள்ளவர்களுக்கு உரிய தொகை கொடுக்கும் உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழக அரசு தொலைதூரப் பேருந்துகள் எந்த உணவகங்களில் நிற்க வேண்டும் என்பது குறித்து நேற்று விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில் பல வரவேற்கத்தக்க அம்சங்களோடு, ஒரு சர்ச்சைக்கு உரிய அம்சமும் இருந்தது. அந்த அறிவிப்பின் வாசகங்கள், “இந்த (கீழ்க்கண்ட) நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் உணவகங்களுக்கு ஒரு ஆண்டிற்கு உரிமம் வழங்கப்படும். உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும்.…
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி கடந்த சில பத்தாண்டுகளில் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகின் மிக உயர்ந்த பகுதியான இமய மலை சிகரம் முதல், உலகின் மிகப் பெரிய பள்ளமான மரியானா அகழி வரை அனைத்து இடங்களுக்கும் பிளாஸ்டிக்கை மனிதன் கொண்டு சேர்த்துவிட்டான். அதன் விளைவாக மனித உடலுக்குள்ளும் பிளாஸ்டிக் இப்போது நுழைந்து உள்ளது. உணவுப் பொருட்களுக்கான கலன்களில் பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படுவதால், உணவு உட்கொள்ளும்போதும், நீர் அருந்தும் போதும், சுவாசிக்கும் போதும் மனித உடலுக்குள் பிளாஸ்டிக் துகள்கள் செல்கின்றன. இவை மனித செல்களை சிதைக்கும் அபாயம் உள்ளது. செம்பு, இரும்பு போன்ற உலோகங்களால் ஆன பொருட்களை மனிதர்கள் பயன்படுத்தும்போது அந்த உலோகத்தின் சிறு துகள்கள் மனித உடலுக்குள் செல்வது உண்டு. ஆனால் அவை தாதுக்களாக மாறிவிடுவதால் உடலால் ஏற்கப்படும், உடல் நலனுக்கும் நன்மை கொடுக்கும். இதற்கு மாறாக மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் 5 மில்லிமீட்டருக்குக் குறைவான விட்டம் கொண்ட…
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப் பேரவையில் பேசியபோது, ”தமிழகத்தில் 90% மக்கள் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்” – என்று கூறியுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக வீட்டில் உள்ள பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் திறன் பேசிகளை வாங்கினர். அதை வளர்ச்சி என்று சொல்வதா? செல்ஃபோன் அவசியமாகிவிட்டபோது அதை ஆடம்பரமாகப் பார்ப்பதா? – என்று சிலர் கேட்டு உள்ளனர். மேலும் சிலர், தமிழகத்தில் திறன் பேசிகளை வாங்கும் நபர்களில் பெரும்பாலானோர் மாதத் தவணையில் தொகை செலுத்திதான் வாங்குகின்றனர். கடனுக்கு செல்ஃபோன் வாங்குவதும் வளர்ச்சியா? – என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பிரசாரம் செய்யும்போது, ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது, வளர்ச்சி இல்லை’ – என்று கூறினார்கள். இப்போது அமைச்சர் கூறும் 90% கைபேசிகளில் பெரும்பாலானவை…
800 ஆண்டுகளாக தீய சக்தியை அடைத்து வைத்திருந்த பாறை என்று ஜப்பானிய மக்கள் கருதிய பாறை ஒன்று சமீபத்தில் உடைந்துள்ளது. இதனால் தீய சக்தி வெளியே வந்திருக்கலாம் என ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து விரிவாகக் காண்போம். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. இதில் ஜப்பானும் விதிவிலக்கு அல்ல. கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஜப்பானை ஆட்சி செய்த அரசர் டோபா. இவரைக் கொல்ல தமாமோ நோமே என்ற பெண்ணை எதிரிகள் பயன்படுத்தியதாகவும், 9 வால்களைக் கொண்ட நரியாக மாறும் ஆற்றல் பெற்ற அந்த பெண்ணை அரசரின் பாதுகாவலர்கள் கொன்றாலும் அந்தப் பெண்ணை முழுமையாக அழிக்க முடியவில்லை என்றும் ஜப்பானில் ஒரு கதை உண்டு. ஒன்பதுவால் நரியின் ஆவியை அழிக்க முடியாததால், அதை ஒரு பாறையில் அடைத்து உள்ளதாகவும், அந்தப் பாறைதான் ஜப்பானில் உள்ள ‘ஷீஷோ சேகி’ எனப்படும் ’கொலைக்கல் பாறை’ என்றும் ஜப்பான் மக்கள் நம்பி வந்தனர்.…
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் 8ஆம் கட்ட அகழாய்வை நடத்தி வருகின்றனர். இந்த அகழாய்வில் கீழடியில் இதுவரை கிடைக்காத புதிய வகை பகடைக் காய் கிடைத்து உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதில், கீழடியில் முந்தைய 7 கட்ட அகழாய்வுகளில் அனைத்து பக்கமும் சமமான அளவுள்ள கனசதுர (Cubical) பகடைக் காய்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், 8ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவம் (Rectangular) கொண்ட தந்தத்தினால் ஆன பகடைக்காய் கிடைத்து உள்ளது – என்று அவர் கூறி உள்ளார். செவ்வக வடிவ பகடைக்காயை பொதுவாக ஜோடியாக மட்டுமே பயன்படுத்த இயலும், இதன் மற்றொரு இணை காலத்தால் அழிந்திருக்கலாம். மேலும் இதன் நீளம் காரணமாக இதை உருவாக்க அதிக தந்தமும் தேவைப்படும். எனவே கீழடியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள மக்கள் இதனைப் பயன்படுத்தி இருக்க…