கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

SHARE

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் 8ஆம் கட்ட அகழாய்வை நடத்தி வருகின்றனர். இந்த அகழாய்வில் கீழடியில் இதுவரை கிடைக்காத புதிய வகை பகடைக் காய் கிடைத்து உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 

படங்களின் மூலம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து.

அதில், கீழடியில் முந்தைய 7 கட்ட அகழாய்வுகளில் அனைத்து பக்கமும் சமமான அளவுள்ள கனசதுர (Cubical) பகடைக் காய்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், 8ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவம் (Rectangular) கொண்ட தந்தத்தினால் ஆன பகடைக்காய் கிடைத்து உள்ளது – என்று அவர் கூறி உள்ளார்.

செவ்வக வடிவ பகடைக்காயை பொதுவாக ஜோடியாக மட்டுமே பயன்படுத்த இயலும், இதன் மற்றொரு இணை காலத்தால் அழிந்திருக்கலாம். மேலும் இதன் நீளம் காரணமாக இதை உருவாக்க அதிக தந்தமும் தேவைப்படும். எனவே கீழடியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள மக்கள் இதனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

உதடுகள் ஒட்டும் குறளும் ஒட்டாத குறளும்…

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

Leave a Comment