கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

SHARE

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் 8ஆம் கட்ட அகழாய்வை நடத்தி வருகின்றனர். இந்த அகழாய்வில் கீழடியில் இதுவரை கிடைக்காத புதிய வகை பகடைக் காய் கிடைத்து உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 

படங்களின் மூலம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து.

அதில், கீழடியில் முந்தைய 7 கட்ட அகழாய்வுகளில் அனைத்து பக்கமும் சமமான அளவுள்ள கனசதுர (Cubical) பகடைக் காய்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், 8ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவம் (Rectangular) கொண்ட தந்தத்தினால் ஆன பகடைக்காய் கிடைத்து உள்ளது – என்று அவர் கூறி உள்ளார்.

செவ்வக வடிவ பகடைக்காயை பொதுவாக ஜோடியாக மட்டுமே பயன்படுத்த இயலும், இதன் மற்றொரு இணை காலத்தால் அழிந்திருக்கலாம். மேலும் இதன் நீளம் காரணமாக இதை உருவாக்க அதிக தந்தமும் தேவைப்படும். எனவே கீழடியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள மக்கள் இதனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானைகள்

Admin

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

பாசுபத சமயத்தின் விநாயகி சிலை கண்டுபிடிப்பு!. விநாயகர் வழிபாடு பிற மதங்களில் இருந்ததற்கு மற்றுமொரு சான்று!.

இரா.மன்னர் மன்னன்

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

Leave a Comment