ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

SHARE

தமிழகத்தில் மிகவும் முற்காலத்திலேயே இரும்புக் கொல்லர்கள் வாழ்ந்த பகுதி ஆதிச்ச நல்லூர். ஆதி தச்ச நல்லூர் – என்பது மருவி ஆதிச்சநல்லூர் என மாறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பானைகள், எலும்புகள், இரும்புக் கருவிகள், வெண்கலக் கருவிகள், தங்கத் தகடுகள் – உள்ளிட்ட தமிழர் வரலாற்றுப் பொருட்கள் நிறைய கிடைத்துள்ளன. 

ஆதிச்ச நல்லூரில் தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் மிக முக்கிய கண்டுபிடிப்பாக சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஒன்று தற்போது அங்கு கிடைத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் சதுரமான தொட்டிக்குள் நான்கு ஆமைகள் உள்ளன. அவற்றோடு யானை, மரம் மற்றும் மீன்களின் உருவங்களும் காணப்படுகின்றன. காசின் பின்பகுதியில் மீன் சின்னம் தெளிவாக இல்லை.

இந்தவகையான நாணயங்களை சங்ககாலப் பாண்டிய அரசர்கள் மட்டுமே வெளியிட்டு உள்ளனர், அதனால் இதனை சங்ககாலப் பாண்டியர் காசு – என ஆய்வாளர்கள் உறுதி செய்து உள்ளனர்.

நாணயத்தின் முன்பகுதியில் தொட்டிக்குள் ஆமைகள் சின்னம் சங்ககாலத் தமிழர்கள் கடல் பயண வழிகாட்டுதலுக்கு உதவும் ஆமைகளை வீட்டிலேயே தொட்டி அமைத்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளதாகவும், யானை, மரம், மீன் – உள்ளிட்ட சின்னங்கள் அப்பகுதியின் வளத்தைக் குறிக்கக் கூடியவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழக அகழாய்வுகளில் பாண்டியர்களின் நாணயங்கள் கிடைப்பது அரிய நிகழ்வு ஆகும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 34 இன்ஸ்பெக்டர்கள்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

Leave a Comment