ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

SHARE

தமிழகத்தில் மிகவும் முற்காலத்திலேயே இரும்புக் கொல்லர்கள் வாழ்ந்த பகுதி ஆதிச்ச நல்லூர். ஆதி தச்ச நல்லூர் – என்பது மருவி ஆதிச்சநல்லூர் என மாறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பானைகள், எலும்புகள், இரும்புக் கருவிகள், வெண்கலக் கருவிகள், தங்கத் தகடுகள் – உள்ளிட்ட தமிழர் வரலாற்றுப் பொருட்கள் நிறைய கிடைத்துள்ளன. 

ஆதிச்ச நல்லூரில் தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் மிக முக்கிய கண்டுபிடிப்பாக சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஒன்று தற்போது அங்கு கிடைத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் சதுரமான தொட்டிக்குள் நான்கு ஆமைகள் உள்ளன. அவற்றோடு யானை, மரம் மற்றும் மீன்களின் உருவங்களும் காணப்படுகின்றன. காசின் பின்பகுதியில் மீன் சின்னம் தெளிவாக இல்லை.

இந்தவகையான நாணயங்களை சங்ககாலப் பாண்டிய அரசர்கள் மட்டுமே வெளியிட்டு உள்ளனர், அதனால் இதனை சங்ககாலப் பாண்டியர் காசு – என ஆய்வாளர்கள் உறுதி செய்து உள்ளனர்.

நாணயத்தின் முன்பகுதியில் தொட்டிக்குள் ஆமைகள் சின்னம் சங்ககாலத் தமிழர்கள் கடல் பயண வழிகாட்டுதலுக்கு உதவும் ஆமைகளை வீட்டிலேயே தொட்டி அமைத்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளதாகவும், யானை, மரம், மீன் – உள்ளிட்ட சின்னங்கள் அப்பகுதியின் வளத்தைக் குறிக்கக் கூடியவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழக அகழாய்வுகளில் பாண்டியர்களின் நாணயங்கள் கிடைப்பது அரிய நிகழ்வு ஆகும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

Admin

Leave a Comment