உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

SHARE

800 ஆண்டுகளாக தீய சக்தியை அடைத்து வைத்திருந்த பாறை என்று ஜப்பானிய மக்கள் கருதிய பாறை ஒன்று சமீபத்தில் உடைந்துள்ளது. இதனால் தீய சக்தி வெளியே வந்திருக்கலாம் என ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து விரிவாகக் காண்போம்.

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு மூடநம்பிக்கைகள் உள்ளன. இதில் ஜப்பானும் விதிவிலக்கு அல்ல.

கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஜப்பானை ஆட்சி செய்த அரசர் டோபா. இவரைக் கொல்ல தமாமோ நோமே என்ற பெண்ணை எதிரிகள் பயன்படுத்தியதாகவும், 9 வால்களைக் கொண்ட நரியாக மாறும் ஆற்றல் பெற்ற அந்த பெண்ணை அரசரின் பாதுகாவலர்கள் கொன்றாலும் அந்தப் பெண்ணை முழுமையாக அழிக்க முடியவில்லை என்றும் ஜப்பானில் ஒரு கதை உண்டு.

ஒன்பதுவால் நரியின் ஆவியை அழிக்க முடியாததால், அதை ஒரு பாறையில் அடைத்து உள்ளதாகவும், அந்தப் பாறைதான் ஜப்பானில் உள்ள ‘ஷீஷோ சேகி’ எனப்படும் ’கொலைக்கல் பாறை’ என்றும் ஜப்பான் மக்கள் நம்பி வந்தனர்.

அந்த கொலைக்கல் பாறைதான் சமீபத்தில் உடைந்து உள்ளது. இதனால் ஒன்பது வால் நரியின் ஆவி வெளியே வந்துவிட்டதாக ஜப்பான் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஆனால் ஜப்பானிய பாறை ஆய்வாளர்கள் அந்த கொலைக்கல் பாறையில் ஏற்கனவே கீறல்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் பருவமாற்றங்களால் கீறல் வழியாக பாறைக்குள் நுழைந்த நீர்தான் பாறையை உடைத்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

ஜப்பான் அரசும் மக்களின் சந்தேகத்தை அகற்றி நம்பிக்கை கொடுக்க ஷீஷோ சேகி பாறை உடைந்தது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்து உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்புறம் அடுத்த ஸ்கெட்ச் யாரு? : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் …விரைவில் 3ம் பட்டியல்?

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

அப்பாவை வேலை பார்க்க விடாத சுட்டிக் குழந்தை – இணையத்தில் வைரலாகும் காணொலி!.

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

Leave a Comment