Author: Admin

ஜி7 மாநாட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’என்ற கோரிக்கையை முன்வைத்தார். பிரிட்டனில் நேற்று ஜி7 மாநாட்டில் காணொலி காட்சி மூலமாக இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி,கொரோனா வைரஸ் தொற்றை ஓழிக்க இந்திய அரசும்,பொதுமக்களும் இணைந்து போராடி வருகிறோம் என கூறினார். மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க காப்புரிமை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் இருக்க கூடாது எனவும் கூறினார். தொடர்ந்து,உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும்.அதற்கு ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற கோட்பாடு தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Read More

போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் எம்3 ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் போக்கோ எம்3 சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அதேசமயம் விற்பனை தொடங்கிய ஒரே மாதத்தில் சுமார் 5 லட்சம் யூனிட்களை கடந்திருந்தது. இந்நிலையில் மூன்று மாதங்களில் போக்கோ எம்3 சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 663 பிராஸசர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 6000mah பேட்டரி திறன், 48 எம்பி பிரைமரி கேமரா ஆகிய வசதிகளை கொண்டு ரூ.10,999க்கு விற்பனையாகிறது.

Read More

திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் அசத்தி வரும் ஜி. வி. பிரகாஷ்குமாருக்கு 34வது பிறந்தநாள் இன்று. வெயில் படத்தின் மூலமாக முறைப்படி இசையமைப்பாளராக அறிமுகமானாலும் 6 வயதிலேயே அவருக்கான சினிமா பயணம் தொடங்கியது என்றே சொல்லலாம். ஆம்..ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடும்போது அவருக்கு 6 வயது தான். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகன் என்பதால் இளம் வயதிலிருந்தே ஜி.வி.க்கு. இசையின் மீது ஒரு காதல் இருந்துள்ளது. அதன் வெளிப்பாடே குறுகிய காலத்தில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, அசுரன், சுரரைப் போற்று, தெறி, மதராசப்பட்டினம் ஆகிய படங்களில் பின்னணி இசையில் தான் ஒரு ஜீனியஸ் தான் என நிரூபித்து இருப்பார்.…

Read More

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. அதனைடிப்படையில் இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு எரிபொருள் விலை உயர்வை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ள நிலையில், ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் ராஜஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தமிழகத்திலும் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Read More

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அரசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே விழிப்புணர்வு கொடுத்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வராததால் இந்த முடிவை அந்த பஞ்சாப் மாகாண அரசு எடுத்துள்ளது. மேலும் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாதது அம்மாகாண அரசை அதிருப்தியில் ஆழ்த்தியதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Read More

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இந்த நிலையில் கோபன்ஹேகனில் நேற்று நடந்த ஆட்டத்தின் போது டென்மார்க் மர்றும் பின்லாந்து அணிகள் விளையாடின. முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார். இதனால் கால் பந்து போட்டி நிறுத்தப்பட்டு. மருத்துவக் குழுவினர் மைதானத்திற்கு வந்து எரிக்சனுக்கு சிகிச்சை அளித்தனர் , ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீராக அவரது ரசிகர்களும் சக வீரர்களும் பிரார்த்தனை செய்தனர். தற்போது கிறிஸ்டியன்…

Read More

ஒவ்வொரு வருடமும் சிறந்த பிரபலமான படங்களின் பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும் அதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படங்களில் முதலில் விஜய் நடித்த மாஸ்டர் படம் முதலிடத்தில் உள்ளது தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2021 பிரபலமான திரைப்படங்கள்; மாஸ்டர்ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)தி வைட் டைகர்திரிஷ்யம் 2நவம்பர் ஸ்டோரிகர்ணன்வக்கீல் ஸாப்மஹாராணி (வெப் சீரிஸ்)கிராக்தி கிரேட் இண்டியன் கிச்சன்

Read More

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தியது, சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்தன. சீன அரசின் இந்த அராஜகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலன். இவர் BuzzFeed என்ற பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றும் போது சீனாவின் முகாம்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவருக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஜின்ஜியாங்கில் சீனா ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த போது மேகா ராஜகோபாலன் அங்கு உள்ள தடுப்பு முகாமுக்கு சென்று சீன அரசின் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனை அவர் வெளியே சொல்லாமல் இருக்க அவரது விசாவை ரத்து செய்தது. நாட்டை விட்டு வெளியேற்றியது சீனா…

Read More

தனது மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டிவிட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து 31-வது ஆண்டு தொடங்கியுள்ளது. தற்போது,பேரறிவாளனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இன்று வரை பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்றனர். இந்நிலையில்,பேரறிவாளன் விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில்: மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?என பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,108 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,39,705 பேர் ஆக அதிகரித்துள்ளது, சென்னையில் இன்று மட்டும் 989 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 374 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 27,463 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 21,48,352 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், முந்தைய சூழலை ஒப்பிடும்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்தே வருகிறது.

Read More