கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

SHARE

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி ட்விட்டரில் திமுக தலைவர்களை தொடர்ந்து மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தார்.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில், கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்… அமைச்சர் சேகர்பாபு

Admin

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

போட்ட வேஷம் மாறியதோ..? இதுதான் விடியலா? ஸ்டாலினை விமர்சித்த வானதி

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

டிரெண்டாகும் சுஹாஞ்சனா! தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்- குவியும் பாராட்டுகள்!

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

Leave a Comment