- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டாலும், பிற மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா? என்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் அந்த ஆலோசனையில், காதாரத்துறை மற்றும் பிற துறை உயர்…
தனக்கு தமிழகமே தாய்வீடு என ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 29வது டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு துறை சார்பில் சிறப்பான முறையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதனையடுத்து 30வது டி.ஜி.பியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபுவை பதவியில் அமர்த்தி காவல் துறையிலிருந்து ஜே.கே திரிபாதி பிரியா விடை பெற்றார். மேலும் வடம் கட்டப்பட்ட காரில் அவரையும் அவரது மனைவியையும் அமர்த்தி காவல்துறை உயர் அதிகாரிகள் அதனை இழுத்துச் சென்று வாயில் வரை கொண்டு சென்று நன்றி தெரிவித்தனர் .சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஜே.கே திரிபாதி, காவல்துறை பணியை 36 ஆண்டுகாலம் சிறப்பாக ஆற்றி இன்று ஓய்வு பெறுகிறேன் என்றும், எனக்கு காவல் பணியில் இந்த பெருமையை வழங்கிய தமிழக அரசுக்கும், உடன் பணியாற்றிய அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் எனது…
மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 1லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இன்று சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, முன்பு 825 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், தற்போது 850 ரூபாய் 50 காசுகளாக விலை உயர்ந்துள்ளது. இதைப்போல வணிக ரீதியான எரிவாயு சிலிண்டரின் விலையும் 84 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் இந்த புதிய விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டதைப்…
இந்தியாவில் டுவிட்டர் தளம் சிறிது நேரம் முடங்கிய நிலையில், பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில் டுவிட்டர் மட்டும் மறுத்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே நாளுக்குநாள் மோதல் அதிகரித்து வருகிறது. புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பல முறை அவகாசம் வழங்கியும், அதனை ஏற்காததால் அந்நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு. இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் தளமானது இன்று காலை சிறிது நேரம் முடங்கிய நிலையில் பின் மீண்டும் செயல்பட தொடங்கியது. இது மத்திய அரசின் நடவடிக்கையா அல்லது டிவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா என்பது தெரியவில்லை. இதுகுறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியதாகவும், சரி செய்யப்பட்டு விட்டதாகவும், பயனாளர்கள்…
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000 இரு தவணைகளில் ரூ.2000 வீதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதனைப் பெற பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் புதிய மின்னணு குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்த மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோரவேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல்…
தமிழக காவல்துறையின் 30ஆவது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார். புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிபாதி. தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இந்த அரிய வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி கூறிய அவர், சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியைத் திணிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அமைச்சம் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாவுக்கு இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்தி தெரியாத, படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை படித்து அறிந்து கொள்ள முடிவதில்லை என்றும், இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாக பேச பயன்படுத்திய இமெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை தேறியவுடன் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தது. குறிப்பாக…
ட்விட்டர் இந்தியா மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் புகார் ஒன்றை டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்தபுகாரின் அடிப்படையில் சிறுவர்களின் ஆபாச படங்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த புகாரின் பேரில் தான் டெல்லி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து தற்போது டுவிட்டர் இந்தியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்திய அரசுக்கும், ட்விட்டர் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில் தற்போது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து 4 முறை பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேபோல் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நிதி ஆண்டில் 10 காசோலைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் காசோலைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண அமல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.