தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

SHARE

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 37.71 லட்சம் பேர் மீறியதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தனிமனித இடைவெளி , முக கவசம் அணிதல், பொது இடங்களில் உமிழ்நீர் துப்ப தடை ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்துள்ளது.

இதனை மீறி செயல்படும் கடைகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறை சட்டத்தின் கீழ் அபராதம் வசூலித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் 22.99 லட்சம் நபர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.52.78 கோடி அபராதம் பெறப்பட்டது.

இந்நிலையில் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களில் தொடர்ந்து அரசின் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் தற்போது தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 37.71 லட்சம் நபர்கள் மீது அரசின் பொது சுகாதாரத் துறை சட்டம் மூலமாக ரூ.67.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

“நான் கடன்காரனா இருக்க விரும்பல” – ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த “நவீன காந்தி”

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

Leave a Comment