தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

SHARE

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 37.71 லட்சம் பேர் மீறியதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தனிமனித இடைவெளி , முக கவசம் அணிதல், பொது இடங்களில் உமிழ்நீர் துப்ப தடை ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்துள்ளது.

இதனை மீறி செயல்படும் கடைகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறை சட்டத்தின் கீழ் அபராதம் வசூலித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் 22.99 லட்சம் நபர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.52.78 கோடி அபராதம் பெறப்பட்டது.

இந்நிலையில் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களில் தொடர்ந்து அரசின் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் தற்போது தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 37.71 லட்சம் நபர்கள் மீது அரசின் பொது சுகாதாரத் துறை சட்டம் மூலமாக ரூ.67.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்… முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin

Leave a Comment