அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 37.71 லட்சம் பேர் மீறியதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தனிமனித இடைவெளி , முக கவசம் அணிதல், பொது இடங்களில் உமிழ்நீர் துப்ப தடை ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்துள்ளது.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/images-28.jpeg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/images-28.jpeg)
இதனை மீறி செயல்படும் கடைகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறை சட்டத்தின் கீழ் அபராதம் வசூலித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் 22.99 லட்சம் நபர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.52.78 கோடி அபராதம் பெறப்பட்டது.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/images-31.jpeg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/images-31.jpeg)
இந்நிலையில் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களில் தொடர்ந்து அரசின் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால் தற்போது தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 37.71 லட்சம் நபர்கள் மீது அரசின் பொது சுகாதாரத் துறை சட்டம் மூலமாக ரூ.67.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது