- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போடியில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக அதே தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் சேப்பாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி வைப்புத்தொகை விவரத்தை வெளியிடவில்லை என கூறி ரவி என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் சொத்து மதிப்பு குறைத்து காட்டியதற்கான ஆவணங்களை மிலானி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க ரவி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.…
திமுக அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு, திமுக அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியடி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. மேலும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதேபோன்று, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரான்சில் நடக்க இயலாத தனது 16 வயது மகனுக்காக பிரத்யேக ரோபோ உடை ஒன்றினை அவரது தந்தை உருவாக்கியுள்ளார். பிரான்ஸை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ரோபோட்டிக் பொறியாளருமான ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா தனது 16 வயது அன்பு மகன் ஆஸ்கர், சக மனிதர்களை போல் நடக்க ஆசைப்பட்டுள்ளார். சக்கர நாற்காலியில் வீட்டை சுற்றி வந்த தனது மகனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று இரவு பகலாக சிந்தித்துள்ளார். இதற்கென தீவிர முயற்சியில் ஈடுபட்ட அவர், தனது மகனுக்காக பிரத்யேக ரோபோ உடை ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த உடை ஆஸ்கரின் அசைவிற்கு ஏற்ப உட்காரவும், எழுந்து நிற்கவும், நடக்கவும் உதவிச்செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன தான் சொகுசு வசதியுடன் மருத்துவமனைகளில் காணப்பட்டாலும், ஜூன் தனது மகனின் பயன்பாட்டுக்கு இதனை உருவாக்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு ஒரு கோடியே 32 லட்சம் என கூறப்படுகிறது. நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்திற்கு மாறன் எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது தனுஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் பாடல் வரிகள் எழுதியுள்ளதாகவும் பாடல் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் சூரியன், நிலவு, விலங்குகள் உள்ளிட்ட உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. முத்திரை நாணயம் என்ற வகையைச் சேர்ந்த நாணயம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ள வெள்ளி முத்திரை நாணயம் வணிகத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தற்போது திமுக தலமையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்த சம்யத்தில் பதவியேற்ற சாலின் குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்பட்டதாக பாராட்டுகள் வருகின்றன இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள் 12 ஐபிஎஸ் அதிகாரிகலை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக தினகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் ரேசன் கடைகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின தமிழகத்தில் குறிப்பாக சென்னை அரசு மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் ஆம்புலன்ஸில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இந்த நிலையில் கொரோனா பரவலின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கையை உடனடியாக அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஆக்சிஜனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த் திடீர் உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழர் நாகரித்தினை பறை சாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாரய்ச்சிகள் நடந்து வருகிறது . குறிப்பாக கீழடி,குந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாரய்ச்சிகள் தமிழரின் பெருமையினை உலகிற்கு ஆதாரத்தோடு அறிவித்துள்ளாது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய கோடரி,கத்தி ,ஜாடி போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு இது வெறும் குழியல்ல புதையல் என்றும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். ஆம், மண்ணோடு அவை கலந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியாதாக கூறப்படும் தமிழ் குடியின் வரலாற்றை ஆதாரத்தோடு கூறுவதால் அது புதையல்தான்.
ராஜீவ்காந்தி வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். இதையேற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். தற்போது சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், ஜூன் மாதம் 28-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி (நாளையுடன்)…
வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த இந்திய வங்கிகளுக்கு இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய் மல்லையா திவாலானவராக அறிவிக்கப்பட்டதால் உலகெங்கும் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது நிறுவனத்தை உருவாக்கவோ முடியாது. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு, இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவரால் கடன் வாங்கவும் முடியாது . இந்த நிலையில் மல்லையா பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கிரடிட் கார்டுகள் மற்றும் சொத்துகள் டிரஸ்டி ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.அவற்றை விற்று…