ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

SHARE

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போடியில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக அதே தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் சேப்பாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி வைப்புத்தொகை விவரத்தை வெளியிடவில்லை என கூறி ரவி என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் சொத்து மதிப்பு குறைத்து காட்டியதற்கான ஆவணங்களை மிலானி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க ரவி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இவ்விறு வழக்குகளும் ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

Nagappan

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

Leave a Comment