ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

SHARE

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போடியில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக அதே தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் சேப்பாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி வைப்புத்தொகை விவரத்தை வெளியிடவில்லை என கூறி ரவி என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் சொத்து மதிப்பு குறைத்து காட்டியதற்கான ஆவணங்களை மிலானி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க ரவி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இவ்விறு வழக்குகளும் ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

Leave a Comment