Author: Admin

கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது என, தமிழ் – ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சங்கால தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையி ல் ஆதாரத்தோடு நிரூபித்து வருகிறது கீழடி, அதானால்தான் கீழடியினை தமிழர்களின் தாய்மடி என தமிழ் அகழ்வாரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறை மூலமாகவும், நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை மூலம் நடந்து வருகின்றன. தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 6-ம் கட்ட அகழாய்வு மூலம் 14,535 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. இந்நிலையில், கீழடியில் வெள்ளிக் காசு…

Read More

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று திமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சேலம், சூரமங்கலத்தில் திமுக அரசுக்கு எதிராக, திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உட்பட 90 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read More

கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்நிலையில் கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் போதிலும் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தினசரி பாதிப்பில் 50 சதவீத எண்ணிக்கை கேரளாவில் பதிவாவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வரும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Read More

மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டதமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது. கர்நாடகாவில் அரசியல் நெருக்கடி காரணமாக எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பொறுப்பேற்றார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என கூறினார். புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நீதிமன்ற உத்தரவை…

Read More

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்திய நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் “அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம். இந்த கேள்விக்காக நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், நாங்கள், எங்களின் கடமைகளையே செய்கிறோம். அவர்களின் குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Read More

தனது வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என எதிர்பார்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என முயற்சி நடந்து வருவதாக கூறிய அவர் என் வீட்டில்தான் ரெய்டு நடக்கும் என முதலில் எதிர்பார்த்ததாகவும் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் பதவியில் நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது திமுகவின் கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள். என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், அனைத்து அதிமுகவினரும்…

Read More

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு நாட்கள் அரசுப் பயணமாக இந்தியா வருகைபுரிந்தார். டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய ஆண்டனி இருநாட்டின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிக்கு பிறகு இரு வெளியுறவு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருநாட்டின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார். மேலும் கொரோனா முதல் அலையில் அமெரிக்கா சிக்கியபோது அதனை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது எனக்கூறினார். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனா அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டும் என தெரிவித்தார். அதை பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா 2வது அலையின்போது இந்தியாவிற்கு உதவியதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.…

Read More

இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் இம்ரான் கான்: பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களே அந்த குற்றத்திற்கு முற்றிலும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நான் கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இக்கருத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எந்தளவுக்கு உணர்வுகளை தூண்டினாலும் அல்லது உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணிந்தாலும் குற்றத்தில் ஈடுபடுபவரே பொறுப்பு ஏற்க வேண்டும். பாதிக்கப்ப்படவர் பொறுப்பு அல்ல.எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தை நான் சொல்லியதே இல்லை. அனைத்து பெண்களையும் இஸ்லாம் மதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.’ உணர்வுகள் தூண்டப்படுவதை தவிர்த்தாலே பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கலாம்’ என, பிரதமர் இம்ரான் கான் பெண்களை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் விமர்சனத்திற்கு…

Read More

2014 ம் ஆண்டு வெளியான பியூஜிலி” ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான கியாரா அத்வானி. பெரிதும் இந்தியா சினிமாவில் பேசப்படமால் இருந்த கிய்ரா அத்வானி ஹிந்தியில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் “எம்.எஸ்.தோனி”-யின் சுயசரிதை திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இந்தியசினிமாவில் தனக்கென ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். இந்த நிலையில் கியாரா அத்தவானி மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். கொரோனா பரவல் காரணமாக முகக கவசம் அணிந்து சென்றிருந்தார் கியாரா அத்வானி அப்போது விமான நிலையத்திலிருந்த CISF அதிகாரியால் இவரை அடையாளம் காண முடியவில்லை. உடனே கியாரா அத்வானியிடம் உங்கள் முககவசத்தை கழட்ட முடியுமா? என கூறியுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதே போன்று ஒரு காட்சி எம் எஸ் தோனி படத்தில் சுஷாந்திடம் கியாரா அத்வானி கேட்பார் தற்போது இந்த காட்சியினை கியாராவுடன் ஒப்பிட்டு payback என இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Read More

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். அபராதம் செலுத்திவிட்டு அறிக்கை தர உத்தரவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது. சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் கொரோனா நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு சொகுசு வரி செலுத்த தடைகோரிய விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Read More