என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

SHARE

தனது வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என எதிர்பார்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என முயற்சி நடந்து வருவதாக கூறிய அவர் என் வீட்டில்தான் ரெய்டு நடக்கும் என முதலில் எதிர்பார்த்ததாகவும் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என கூறினார்.

மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் பதவியில் நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது திமுகவின் கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள்.

என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், அனைத்து அதிமுகவினரும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தன்வீட்டில்தான் ரெய்டு நடக்கு என எதிர்பார்த்ததாக வேலுமணி கூறியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

Admin

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

இந்தியாவில் கொரோனாபலி 42 லட்சம் ? சர்சைக்குள்ளான அமெரிக்க பத்திரிகை

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

Leave a Comment