Author: Admin

அமெரிக்காவை சார்ந்த வில்லியம் சாட்னர் என்பவர் யானைகளை மையப்படுத்தி return to the forest என்ற ஆவணப்படத்தை எடுத்து ஆகஸ்ட் 12,2012 ஆம் நாள் வெளியிட்டுருந்தார். அன்றைய தினத்தை வருடா வருடம் யானைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த பூமியில் பூமியில் டைனோசர்களை பார்க்காத மனிதன் கம்பீரமான மிகப்பெரிய விலங்காக மனித இனம் பார்த்து மளைத்து போன விலங்கு யானைகள் . பெரிய உடல், அதித நியாபக சக்தி கூட்டமாக இருக்கும் குடும்பம் என அழகாக தோன்றும் யானைகளில் 24 வகையான யானைகள் இருந்துள்ளதாகாவும்அதில் 22 வகையான யானைகள் அழிந்து விட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் மட்டுமே உயிரிவாழ்கிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன. யானைகள் ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ வரையிலான பசுமையான செடி, கொடிகளை ஒடித்து சாப்பிடுகிறது. மீதமுள்ள செடிகளை மற்ற விலங்குகளுக்கு விட்டுவிட்டு…

Read More

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர். ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் அந்நாட்டின் முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வருகின்றனர். தாலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆப்கன் ராணுவம் திணறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆப்கன் ராணுவத்திற்கு இந்தியா பரிசாக அளித்த எம்ஐ 24 ரக போர் ஹெலிகாப்டரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கண்டூஸ் மாநில தலைநகரை அதிரடியாக கைப்பற்றிய தாலிபான்கள், ராணுவ வாகனங்கள், கவச வாகனங்களை கைப்பற்றினர். அதில் இந்திய ஆப்கான் அரசுக்கு வழங்கிய ஹெலிகாப்டரும் அடக்கம். இது தொடர்பாக வெளியான காட்சிகளில் இந்திய பரிசளித்த ஹெலிகாப்டரில் சுழலும் இறக்கைகல் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Read More

தகுதி போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் மாற்றுத் திறனாளி வீராங்கனை புறக்கணிக்கப்பட்டாரா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவி சமீஹா, இவர் காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், ஆகஸ்ட்23 முதல் 28 ம் தேதி போலந்து நாட்டில் நடைபெறும் தடகள போட்டியில், பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் 12 பேரில் ஒருவராக இவர் தேர்ச்சி பெற்றார். ஆனால் மற்றொரு வீராங்கனை தகுதி பெறாததால், தனி ஒருவராக இவரை மட்டும் போலாந்து போட்டிக்கு அழைத்து செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் மாணவி சமீஹா நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விளையாட்டுக் கழகத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ந்தொடர்ந்தார் சமீஹா பானு இந்த வழக்குநீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் கடந்த ஏழு ஆண்டுகளாக கடும் சிரமங்களுடன்…

Read More

நடிகர் விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் சென்னை வந்திருந்த தோனி அதே படப்பிடிப்பு தளத்தில் இரண்டு நாட்கள் தனியார் விளம்பர நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். ஒரே படப்பிடிப்புத் தளத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருந்ததால் இருவரும் சந்தித்து உரையாடினர்.மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பல்வேறு நபர்களுடன் தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Read More

ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கான் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தலிபான்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மேலும் 3 மாகாணங்களை தாலிபான்கள் தன் வசமாக்கியுள்ளனர் வடக்கிழக்கில் இருக்கும் பதாக்சன், பாக்லான் மாகாணங்களில் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், மேற்கு பகுதியில் பாரா மாகாணமும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பால்க் மாகாணத்துக்கு விரைந்துள்ளார். தற்போது வரைதலைநகர் காபூலுக்கு முன்கூட்டியே இதுவரை நேரடியாக அச்சுறுத்தல் வரவில்லை. எனினும், தலிபான்களின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் அரசு கட்டுப்பாட்டில் காபூல் இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.…

Read More

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி அடைந்துள்ளது தொழில்நுட்ப கோளாறால் Eos-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் முழுமையாக திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் கூறியுள்ளார். கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சரியாக காலை 5.43 மணிக்கு காலை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எனினும் அதன் பயணம் தோல்வி அடைந்துள்ளது. இஸ்ரோ இதுவரை 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 ராக்கெட்கள் பயணம் தோல்வி அடைந்துள்ளது இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக இ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இந்தியா உருவாக்கியது

Read More

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இதனைத் தொடர்ந்து நாளை 2வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய மீட் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார். ஏற்கனவே 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கூட்டணி தான் இந்தத் தொடர் முழுவதும் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தெரிவித்த நிலையில், ஷர்துல் தாகூர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.…

Read More

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு-2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 5ஜி மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.இதில் 12 ஜிபி ரேம், 32 எம்பி செல்ஃபி கேமரா, 50 எம்பி பிரைமரி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200-ஏஐ பிராசஸர் ஆகிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை தனது தந்தைக்கு வாங்கிய நபர் ஒருவர் வெடித்து சிதறியதாகவும், கட்டில் மீது எரிந்துகண்டிருந்த போனை தனது தந்தை தட்டி விட்டதாகவும் புகார் தெரிவித்தார். அவர் புகைப்படங்கள் எதுவும் வெளியிடாத நிலையில், அவரின் ட்விட்டர் பதிவு அடுத்த சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் ஒன்பிளஸ் நிறுவனம் அந்த நபருக்கு பதில் அளித்துள்ளது. அதில், “எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம். இந்த…

Read More

தொடர்ந்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருவதால் தன்னால் இரவு நேரஞஉறங்கக் கூட முடியவில்லை என அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. வரும் 13ம் தேதி வரை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த 16 நாள்களாக பெகாசஸ் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டம் திரும்ப பெறுதல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் பெகாசஸ் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் முழக்கங்களை எழுப்பினர்.அமளிக்கு மத்தியில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், ஆனால் சில மாநிலங்களவை உறுப்பினர் நேற்று மேஜை மேல் ஏறியதன் காரணமாக அதன் அனைத்து புனிதமும் அழிக்கப்பட்டது என்று வேதனை தெரிவித்தார். இதனால் நேற்று…

Read More

ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்த இந்து மகா சபாக்கள். விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார் சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார். அவர் புகார் மனுவில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும் ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் ஸ்ரீகண்டன் மிரட்டலில் ஈடுபட்டதாக தனது புகாரில்கூறியிருந்தார் இந்த புகாரின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகண்டன் தாக்கல் செய்த மனுவானது…

Read More