பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

SHARE

குதி போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் மாற்றுத் திறனாளி வீராங்கனை புறக்கணிக்கப்பட்டாரா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவி சமீஹா, இவர் காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும், ஆகஸ்ட்23 முதல் 28 ம் தேதி போலந்து நாட்டில் நடைபெறும் தடகள போட்டியில், பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் 12 பேரில் ஒருவராக இவர் தேர்ச்சி பெற்றார்.

ஆனால் மற்றொரு வீராங்கனை தகுதி பெறாததால், தனி ஒருவராக இவரை மட்டும் போலாந்து போட்டிக்கு அழைத்து செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் மாணவி சமீஹா நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விளையாட்டுக் கழகத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ந்தொடர்ந்தார் சமீஹா பானு இந்த வழக்கு
நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் கடந்த ஏழு ஆண்டுகளாக கடும் சிரமங்களுடன் கடும் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், விளையாட்டு கழகத்தின் முடிவினால் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சமீஹா தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து நீதிபதி, தகுதிப்போட்டியில் தேர்வு பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பதா?- என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இரா.மன்னர் மன்னன்

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

Leave a Comment