இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

SHARE

ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கான் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தலிபான்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மேலும் 3 மாகாணங்களை தாலிபான்கள் தன் வசமாக்கியுள்ளனர்

வடக்கிழக்கில் இருக்கும் பதாக்சன், பாக்லான் மாகாணங்களில் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், மேற்கு பகுதியில் பாரா மாகாணமும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பால்க் மாகாணத்துக்கு விரைந்துள்ளார். தற்போது வரைதலைநகர் காபூலுக்கு முன்கூட்டியே இதுவரை நேரடியாக அச்சுறுத்தல் வரவில்லை. எனினும், தலிபான்களின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் அரசு கட்டுப்பாட்டில் காபூல் இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த பதற்றமான சூழலில், பாதுகாப்பு கருதி ஆப்கானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற, இந்திய துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் புதிய மதிப்பீட்டின்படி, 90 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களிடம் வீழும் என வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

செக் வைத்த லண்டன் நீதிமன்றம்.. வசமாக சிக்கிய மல்லையா!

Admin

பிரான்ஸ் அதிபருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் … பரபரப்பான பிரான்ஸ்!

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

Leave a Comment