Author: Admin

தனிமையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் ரோபோ ஒன்று இந்தோனேசியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிமை பலருக்கும் வாழ்வின் கொடுமை என்றே சொல்லலாம். சிலநேரம் பேசக்கூட துணையில்லாமல் தனிமையில் வாடி விபரீதமான முடிவுகளை தேடி கொள்பவர்களும் உண்டு. இதனிடையே கடந்த ஆண்டு முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப் படுவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்தோனேசியாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் மின்சாதனப் பொருட்களை சேர்த்து இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, வீடுகளுக்கு வெளியே கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோவை ஈடுபடுத்தியுள்ளனர். பொருட்களை வழங்கிய பின், தனிமையில் உள்ளவர்களுக்கு ரோபோ ஆறுதல் வார்த்தைகளையும் கூறுகிறது. டெல்டா ரோபோட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ மூலம், பல்வேறு வகையில் பலன்களை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.…

Read More

‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக நடிகர் சிம்பு தனது எடையை 15 கிலோ குறைத்துள்ளார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி 3வது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. மேலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் சிறுவயது கதாபாத்திரத்திற்காக சிம்பு தனது எடையை 15 கிலோ குறைத்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read More

தமிழகத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க வளர்ச்சியோடும் சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி என்று கனிமொழி எம்.பி. ட்வீட் செய்துள்ளார் திமுக மகளிரணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், தொழில்துறை அலகுகளுக்காக 60MLT கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், அறைகலன்கள் சர்வதேச பூங்கா, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய திட்டங்களை தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு, தூத்துக்குடி மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் மரங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் காகிதமில்லாத இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இம்மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. இந்த நிலையில்திமுக அரசின் முதல் பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பே அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைத் தலைவர் அப்பாவு அமருமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கேட்காமல் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தவுடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றமளிப்பதாக கூறினார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித்…

Read More

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பட்ஜெட் குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் இந்த பட்ஜெட் மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட்தான் தமிழ்நாடு பட்ஜெட் என கூறினார் மேலும் யானை பசிக்கு சோளப் பொரி போல தமிழக பட்ஜெட் உள்ளது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள். தெளிவான நிலை இல்லை என கூறிய ஜெயக்குமார் . பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாகவும்2011-ல் கஜானாவை காலி செய்து விட்டுதான் திமுக ஆட்சி சென்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் திமுக அரசு சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள் என கூறியுள்ளார்.

Read More

ஜெயலலிதா மரண வழக்கில் 90% விசாரணை முடிந்துவிட்டதாக ஆறுமுக சாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைவழிநடத்திய ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பான விசாரணையை நடத்த அப்போதைய அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது. விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் இருந்து ஜெயலலிதா மரணத்தின் இருக்கும் மர்மம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது இதுவரை 11 முறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விசாரணை ஆணையம்…

Read More

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஹாட் ஸ்டாரில் வெளியான சில நிமிடங்களியே இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், நயன்தாரா நடித்துள்ள படம், நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பார்வை யற்றப் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை நயன்தாரா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை. பிளைண்ட் என்ற கொரிய படத்தின் உரிமை பெற்று உருவாகியுள்ள இந்த படத்தில் படத்துக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இன்று 12.30 மணிக்கு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படம், வெளியான பத்தே நிமிடத்தில் தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே போல மேலும் சில இணையதளங்களிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர்…

Read More

காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டர் ஆபத்தான விளையாட்டு என்ற தலைப்பில் யூடியூப்பில் ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார் டெல்லியில் சிறுமி பாலியல் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அவர் பக்கத்தை ட்விட்டர் முடக்கியது மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும், அக்கட்சியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் ட்விட்டர் ஆபத்தான விளையாட்டு என்ற தலைப்பில் யூடியூபில் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ட்விட்டர் நிறுவனம், இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாட்டில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் தன்னை 2 கோடி பேர் பின் தொடர்ந்ததாகவும் அவர்களின் கருத்து சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள ராகுல் ட்விட்டர் என்பது நடுநிலையானது என்ற…

Read More

மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில்ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபாய் விவகாரம் பேசு பொருளானது. பாஜக எல்.முருகன் திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லைகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார் ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பிய இதற்கிடையே1000 ரூபாய் வழங்குவதில் நிறைய சந்தேகங்கள் எழுந்தன. அதில் குறிப்பாக ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவராக பெண் இருந்தால் மட்டுமே தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒரு வதந்தி பரவியது. இது உண்மையா என்றுகூட ஆராயமல், ஏராளமான பெண்கள்…

Read More

பெட்ரோல் விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை செயலளார் கிருஷ்ணன் அறிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றை அதிகமாக பயன்படுத்துவது நடுத்தர உழைக்கும் வர்க்கத்தினர் தற்போது மத்திய அரசின்பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளாமல் மத்திய அரசே பபயன்பெறுவதால் பெட்ரோலின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார் அதே சமயம், பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்க…

Read More