தனிமையில் இருக்கிறீர்களா?.. ஆறுதல் சொல்ல வந்தாச்சு ரோபோ…

SHARE

தனிமையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் ரோபோ ஒன்று இந்தோனேசியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனிமை பலருக்கும் வாழ்வின் கொடுமை என்றே சொல்லலாம். சிலநேரம் பேசக்கூட துணையில்லாமல் தனிமையில் வாடி விபரீதமான முடிவுகளை தேடி கொள்பவர்களும் உண்டு.

இதனிடையே கடந்த ஆண்டு முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப் படுவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் இந்தோனேசியாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் இருக்கும் மின்சாதனப் பொருட்களை சேர்த்து இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, வீடுகளுக்கு வெளியே கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோவை ஈடுபடுத்தியுள்ளனர்.

பொருட்களை வழங்கிய பின், தனிமையில் உள்ளவர்களுக்கு ரோபோ ஆறுதல் வார்த்தைகளையும் கூறுகிறது.

டெல்டா ரோபோட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ மூலம், பல்வேறு வகையில் பலன்களை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

அதிபராக இருந்தால் என்ன தப்புதான் : அதிரடி நடவடிக்கை எடுத்த யூடியூப்!

Admin

இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா? – சர்வதேச இடது கை நபர்கள் தின சிறப்புக் கட்டுரை!.

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர்!

Admin

விண்வெளியில் தனக்கென தனி சாம்ராஜயம்.. ஆய்வு கூடத்திற்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

Leave a Comment