- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
புதுடெல்லி. கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல். பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர்தான் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்பட்டன. தொடக்கத்தில் அதிகமாக மக்களிடம் புழங்கிய இந்த 2000 ரூபாய் வங்கித்தாள்களை சமீப காலங்களில் காணவே முடியவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘2000 ரூபாய் வங்கித்தாள்கள் மீண்டும் அச்சடிக்கப்படுகின்றவா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட, இந்தக் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமான விரிவான பதிலை அளித்தார். அதில், கடந்த 2016-17ஆம் ஆண்டில் 354 கோடியே 39 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும், 2017-18ஆம் ஆண்டில் அது 11 கோடியே 15 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகவும் , 2018-19ல் அந்த எண்ணிக்கை இன்னும் குறைகப்பட்டு 4 கோடியே 666 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் கடந்த…
நமது நிருபர் தமிழக தலைமைச் செயலாளரும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்ற ஆலோசனையில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க உத்தரவு. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை விடவும் இந்தியாவில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டது. தமிழகத்திலும் படிப்படியாகக் குறைந்த கொரோனா பாதிப்பு பின்னர் தினந்தோறும் 500க்குக் குறைவானவர்களுக்கே பாதிப்பு என்ற நிலைக்கு வந்தது. ஆனால், சமீபத்திய நாட்களில் இந்த நிலை மாறி உள்ளது. மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 1.2% அதிகரித்தது. தமிழகத்தின் பெரு நகரங்களிதான் இந்த கொரோனா பரவல் விகிதம் பெரிதும் அதிகரித்து உள்ளது, கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வில் மக்கள் அலட்சியம் காட்டுவதே இந்த திடீர் அதிகரிப்புக்குக் காரணம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாகத் தமிழகத் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலிக் காட்சி வாயிலாக…
நமது நிருபர். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தின் படப் பிடிப்பு 2 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது. ரஜினியின் நடிப்பில் இயக்குநர் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு படப் பிடிப்புகள் தொடங்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் கீரித்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு எனப் பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். படத்தின் பணிகள் கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, படக் குழுவில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படப் பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் கடந்த 2 மாதங்களாக அண்ணாத்த படம் தொடர்பான படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஹைதராப்பாத்திற்கு பதில் சென்னையிலேயே பெரிய செட்கள் போடப்பட்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது. இப்படியாக ஒரு மாதம் சென்னையிலேயே படப் பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளதாகவும்,…
சென்னை: நமது நிருபர். 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடும் திட்டம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. கொரோனா தாக்கத்தால் சுமார் 10 மாதங்களாக முடங்கி இருந்த தமிழகத்தின் பள்ளிக் கூடங்கள் இந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட ஆலோசனைகளில் மக்கள் முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த சூழலால் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து விடலாம் என்று ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மறுபக்கம் விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்படும்…
நமது நிருபர். நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போவதாக இயக்குநர் அறிவிப்பு. நடிகர் விக்ரம் நடிப்பில், இமைக்கா நொடிகள் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் இர்பான் பதான் தமிழுக்கு நடிகராக அறிமுகமாகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் இந்தத் திரைப்படத்தில் நடித்து உள்ளனர். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்கள் முன்பு ரஷ்யாவில் நிறைவடைந்தது. தற்போது சென்னையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், படம் மே மாதம் ரம்ஜான் திருநாளை ஒட்டி வெளியாகும் என்றே திரைப்படக் குழு கூறி வந்தது. ஆனால் பின்னணிப் பணிகள் அதற்குள் முடியாது என்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாத்தில்தான் இருக்கும் என்று படத்தின் இயக்குநர்…
நமது நிருபர். நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் போஸ்டர் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிக்க, அவரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் 60ஆவது படமான ’வலிமை’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் சமீப காலங்களில் வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரிடமும் ‘வலிமை பட அப்டேட் என்ன?’ என்று கேட்டு வந்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ள தேதியை டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதில் அஜித்தின் 50ஆவது பிறந்தநாளான மே-1 அன்று படத்தின் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போனிகபூருக்கு பல்வேறு விதங்களில் நன்றி சொல்லி வருகின்றனர். அதிலும்…
நமது நிருபர். பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவரது படங்கள் நடிப்புக்கும் சமூக சிந்தனைக்கும் பெயர் பெற்றவை. இவரது லகான் படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவரது ரங் தே பசந்தி, தாரே ஜமீந் பர் – படங்கள் இந்தியாவை அதிர வைத்தன. இவரது கஜினி, பிகே – ஆகிய படங்கள் இந்திய வசூல் சாதனைகளை முறியடிக்க, இவரது தங்கல் திரைப்படம் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது. இருந்தாலும் இவர் சமீபத்தில் நடித்த ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ திரைப்படத்தின் படுதோல்வி இவரைக் கடுமையாக பாதித்தும் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று நடிகர் அமீர்கான் தனது 56ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதை இவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். இந்நிலையில் இன்று…
வாஷிங்டன். நமது நிருபர். ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டின் நிறவெறி கொலை வழக்கில் இழப்பீடாக 196 கோடி ரூபாய் அளிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட், இவர் அங்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு மே 25அன்று, இவர் ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் கொடுத்தார். அந்தப் பணத்தில் அவருக்கே தெரியாமல் ஒரு 20 டாலர் கள்ள நோட்டும் இருந்தது. எனவே கடையின் பணியாளர்கள் மினியாபோலீஸ் நகரக் காவல்துறைக்கு தகவல் சொல்ல அங்கு டெரிக் சாவின் என்ற அதிகாரி தலைமையில் 4 காவல்துறையினர் வந்தனர். அவர்கள் ஜார்ஜ் பிளாய்ட்-டிடம் அடக்குமுறையாக நடந்து காவல் வாகனத்தில் ஏறச் சொல்ல பிளாய்ட் அதற்கு மறுத்தார். உடனே டெரிக் சாவின் பிளாய்ட்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியால் அழுத்தினார். அப்போது, ‘அழுத்தாதீர்கள்… என்னால்…
நமது நிருபர். 1960களில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 190 படங்களுக்கும் மேல் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜமுனா. தெலுங்குத் திரையுலகிற்கு மிகவும் பரிச்சயமான இவர் தமிழில் தங்கமலை ரகசியம், தெனாலி ராமன், தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் தெலுங்குத் திரையுலகில்தான் வெற்றிகரமான கதாநாயகியாக விளங்கினார். 16 வயதிலேயே கதாநாயகியான இவர், திரைப்படத்தில் நடிப்பதைத் தவிர இயக்குநராகவும் திகழ்ந்தவர் . பின்னாட்களில் அரசியலிலும் ஈடுபட்டார். தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வந்து சக்கைபோடு போடுகின்றன. சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’சஞ்சு’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகா நடி’ ஆகியவை இந்திய அளவில் பெரும் வசூலைப் பெற்றவை. அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணவத் நடிக்கும் ’தலைவி’ படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.…
நமது நிருபர் சீனா, இந்தியா, வங்க தேசம் ஆகிய நாடுகளிடையே ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்ட உள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது. ஆசிய கண்டத்தில் ஓடும் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்ம புத்ரா. இந்தியாவில் ஓடும் நதிகளில் ஆணின் பெயர் கொண்ட ஒரே நதி என்ற பெருமையும் இதற்கு உண்டு. தற்போது சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக உள்ள திபெத்தில் தொடங்கி சீனா வழியாக வந்து, இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்து, வங்க தேசம் வரையில் பாயும் பிரம்மபுத்ரா நதியால் 3 பெரிய நாடுகள் பயனடைகின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் நீர் வளத்துக்கு பிரம்மபுத்ராவையே நம்பி உள்ளன. பிரம்மபுத்ரா நதி அருணாச்சல பிரதேசத்தில் நுழையும் இடத்திலேயே ஒரு அணையைக் கட்டி நதியைத் தடுக்கு ஒரு திட்டத்தைக் கடந்த ஆண்டு சீன அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் குறித்த எதிர்ப்பை இந்தியாவும் வங்க தேசமும் சீனாவுக்கு தெரிவித்தன.…