அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

SHARE

பாரிஸ்:

24 மணி நேரத்தில் 45,000 நபர்களைக் கொரோனா தாக்கிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சில் மார்ச் 26ஆம் தேதிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பிரான்சில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று மார்ச் 26ஆம் தேதியன்று 24 மணிநேரத்தில்  45,000 நபர்களுக்குப் பரவியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பிரான்சில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் அறிவித்தார்.

இந்த ஊரடங்கின் படி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான விதிமுறைகள் அமலாகி உள்ளன. உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கேளிக்கை விடுதிகள் – உள்ளிட்டவை இனி இரவில் மூடப்படுகின்றன. வரும் நாட்களில் இந்தக் கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

பிரான்ஸ்சில் உள்ள மருத்துவ அமைப்புகளுக்கு இனி அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும் என பிரான்ஸ் நாட்டின் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் கூறி உள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது ஆகும்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்: ஜின் பிங் ஆவேச பேச்சு

Admin

அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – திணறும் தீயணைப்பு படை வீரர்கள்

Admin

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

கல்லாக மாறும் பெண் குழந்தை … அபூர்வ நோயால் போராடும் அவலம்…

Admin

Leave a Comment