வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

SHARE

புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக வாகனப் பதிவு புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு மீண்டும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் இந்தியா தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் பல்வேறு அமைச்சகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வாகனங்களைப் பயன்படுத்தும் மக்கள் தங்கள் வாகனப் பதிவை புதுப்பிக்கவும், வாகன ஓட்டிகள் தங்கள் உரிமத்தைப் புதுப்பிப்பதற்குமான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு மார்ச் 31ஆம் தேதிவரை கால அவகாசம் இருந்த நிலையில் இன்னும் மூன்று மாத கூடுதல் கால அவகாசம் மக்களுக்கு இதனால் கிடைக்கும். எனவே ஜூன் 30ஆம் தேதிக்குள் மக்கள் இவற்றைப் புதுப்பித்தால் போதும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டில் இருந்து இந்த கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

Leave a Comment