- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தத்துவார்த்த தளத்தில் நின்று கோட்பாட்டு உருவாக்கம் செய்து, நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி வெளியிட்டுள்ள முதல் நூல். வெறும் ஆயுத போராளியாகவே பிரபாகரனை அறிந்த தமிழக தமிழர்களுக்கு இந்நூலின் மூலமாக பிரபாகரனை ஓர் தத்துவாசிரியனாக, சட்டக மேதையாக அவரின் ஒப்பற்ற ஆளுமைத்திறனையும் பன்முக ஆற்றலையும் அதன் முழு பரிணாமங்களையும் வெளிக்கொணருகிறார் நூலாசிரியர் சு.சேதுராமலிங்கம். சு.சேதுராமலிங்கம் அவர்கள் தமிழினத்திற்கு கிடைத்துள்ள ஓர் ஆகச்சிறந்த அறிவியலாளர். 2009 ஈழ பேரழிவின் விளைவாக “எல்லாம் முடிந்தது. இனி நாம் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை” என்று உலகத்தமிழர்கள் அனைவரும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் தருணத்தில் ‘நாம் வீழவில்லை. நாம் வென்றுவிட்டாம். இனிதான் நாம் ஆட வேண்டிய உண்மையான ஆட்டமே ஆரம்பமாகிறது. அதற்குள் துவண்டு போனால் எப்படி?’ என்று நம்மை பேரெழுச்சிக்கொள்ள பெரு அழைப்பு விடுக்கிறார் அவர். அத்தகைய பேரெழுச்சிக்காக அவர் படைத்தருளிய ஓர் பேராயுதம் தான் ‘பிரபாகரன் சட்டகம்’. 2009 மே…
மகாபலிபுரம், ஒரு மாலை நேரம்… பேரிரைச்சலோடு அலைகள் எழுவதும் விழுவதுமாக இருந்தன… கடல் நீரில் குடும்பம் சகிதமாக குளியல் போடும் ஒரு கூட்டம்… அலைகளில் கால்களை மட்டும் நனைத்தால் போதும் என்றொரு கூட்டம்.. கடற்கரையில் இருந்து அலைகளை ரசித்தால் மட்டுமே போதும் என மற்றொரு கூட்டம்… எத்தனைவிதமான மனிதர்கள்…! கடற்கரை மணலைக் கோதியபடி அந்த காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தான் புகழேந்தி. ஒரு தம்பதி அவர்களின் குழந்தையுடன் கடலலையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தம்பதிகளைப் பார்த்தான்.. அவர்கள் குடும்பத்துடன் விளையாடும் அந்த காட்சியை கண்டு அவனது கண்களில் கண்ணீர் சுரந்தது. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். பெருமூச்சு விட்டபடி கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தான். கடற்கரைக்கு வெளியில் வந்து ஒரு பெட்டிக்கடையில் நின்று சிகரெட் வாங்கி பற்ற வைத்தான். அவனது மனது மிகுந்த குழப்பத்தில் இருக்கிறது என்பதை அவனைப் பார்க்கும் யாரும் சொல்லி விடுவார்கள். சிகரெட்டின் புகை நுரையீரலை முழுமையாக ஆக்கிரமித்த…
மருத்துவ உலகம் ஒரு சாமானியனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கிறது?, மருத்துவம் எந்த இடத்தில் அரசியலோடு கை கோர்க்கிறது?, மனித உணர்வுகள் எப்படி பணமாக்க மாற்றப்படுகின்றன? – இவற்றை எல்லாம் விளக்கும் புதிய தொடர்கதை…ர.ஆனந்தன் எழுதும் ‘மரணத்தின் விலை!’ சஸ்பென்ஸ் திரில்லர் தொடர் கதை விரைவில் உங்கள் மெய் எழுத்து செய்தித் தளத்தில் வெளியாக உள்ளது…புகைப்படம்: Background photo created by valeria_aksakova – www.freepik.com
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. இந்த படம் டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. அனபெல் சேதுபதி படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே இது ஹாரர் காமெடி வகைப் படம் என்பது தெரிகிறது. படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி தவிர ராதிகா சரத்குமார், யோகி பாபு, தேவதர்ஷினி, சேத்தன், சுரேகா வாணி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் உள்ளனர். இப்படத்தின் இயக்குனர் தீபக் சுந்தரராஜன், இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரின் ஆர்.சுந்தரராஜனின் மகனாவார். இந்த படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதியை ஜெய்பூரில் எடுத்தாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மளையாளம் ஆகிய மொழிகளில் வெளியாடுவதாகவும் உள்ளனர்.
அமேசான் பிரைம் தளத்தில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் தமிழ் காமெடி ரியாலிட்டி ஷோ “LOL – ENGA SIRI PAAPOM”. மறைந்த நடிகர் விவேக் மற்றும் நடிகர் சிவா தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது, வெகு நாட்கள் கழித்து நடிகர் விவேக் அவர்களை பார்க்கையில் அவர் உயிருடன் இல்லை என்பதே மறந்துபோனது என்று தான் சொல்ல வேண்டும். எங்க சிரி பாப்போம் நிகழ்ச்சியில் மாயா, பவர்ஸ்டார், சதீஷ், விஜய் டிவி புகழ், அபிஷேக், ஹாரத்தி, ஃபக்கி, விக்னேஷ்காந்த், பிரேம்ஜி அமரன், ஷியாமா ஹரிணி என்று பத்து காமெடி நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த காமெடி நிகழ்ச்சி 25 நிமிடங்களைக் கொண்ட 6 எபிசோடுகளாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி ஃபிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பத்து காமெடி நடிகர்களும் ஒரே அறையில் 6 மணி நேரம், தான் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க…
இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்குப் பின்பு கிடைத்த முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கம். சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கமும் அதுதான். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இருந்து திரும்பிய பின்னர் நீரஜ் சோப்ராவுக்கு நிறைய மரியாதைகள் செய்யப்பட்டன. பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவர் அழைக்கப்பட்டார். இவற்றை வெளியில் இருந்து பார்க்கும் போது நீரஜ் சோப்ராவுக்கு சந்தோஷம் தரும் செயல்களாகத் தோன்றினாலும் உண்மை அப்படி இல்லை!. இந்த அமளிகளால் தனது விளையாட்டுப் பயிற்சி தடைபட்டு உள்ளதாக நீரஜ் ஒரு பேட்டியில் கூறி உள்ளது ஊடகங்களையும் மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நீரஜ் சோப்ரா, “ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் இந்த மாத இறுதியில் நடக்கும் டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்க இருந்தேன். ஆனால் தொடர் பாராட்டு நிகழ்ச்சிகளால் விளையாட்டுப் பயிற்சியில் என்னால் பங்கேற்க இயலவில்லை. எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டது, இதனால்…
இந்த நூல் திராவிடம் எனும் சொல்லை அடிப்படையாக கொண்டு தொகுத்து ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் திராவிடம் எனும் சொல் தமிழ்ச் சொல் இல்லை என்பதை நிறைய சான்றுகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என நாவுக்கரசர் பாடினார். ஆரியன் என்னும் சொல்லுக்கு எதிர்மறையான சங்க சொல் தமிழன் என்பதே அவர் காலத்தில் வழங்கி வந்துள்ளது என்பது தெளியப்படும். தமிழுக்கான மாற்றுச்சொல், தமிழக, ஆந்திர, கருநாடக,கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு, பார்ப்பனிய மேலாண்மைக்கு எதிராக உயர்த்திப் பிடிக்கப்பட்ட கருத்துநிலை ஆகிய மூன்று அடிப்படைகளில் மட்டுமே திராவிடம் என்ற சொல் இருபதாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை ஆளப்படுகிறது என்பது என்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிடம், திராவிடர்-இந்தச் சொற்கள் பெரியார் பிறப்பதற்கு (1879) இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே (1856) தமிழ் மண்ணிற்கு அறிமுகமானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழக அரசியலை ஆக்கிரமித்திருந்தவை. தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளைத்…
1976 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, இடது கை பழக்கமுடையோருக்கான நாளாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இடது கை பழக்கமுடையவர்கள் உலக மக்கள் தொகையில் சுமார் 10% பேர் மட்டும்தான். இந்த சிறுபான்மையினர், தங்கள் இடது கை பழக்கத்தால் தாங்கள் சந்திக்கும் நன்மை மற்றும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சரி எப்படி மனிதர்களில் இடது கை மற்றும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகள் உருவாகின?. இதன் பதில் நமது கைகளில் அல்ல, மூளையில் உள்ளது!. நம்முடைய மூளை மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது. 1.பெருமூளை 2.சிறுமூளை 3.நீள்வளைய மையவிழையம். பெருமூளையானது இரண்டு அரைக்கோளப் பகுதிகளால் ஆனது. இவற்றில் இடது பக்கத்தில் உள்ள அரைகோளம் நமது உடலில் உள்ள வலது பக்க உறுப்புகளையும், வலது பக்கத்தில் உள்ள அரைகோளம் நமது இடது பக்க உறுப்புகளையும் இயக்குகின்றது.…
அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாள். ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாட்கள்தான். அதில் ஆடி அமாவாசை முன்னோர்களைக் கொண்டாடக்கூடிய நாள். இந்த வருடம், வரும் 08.08.2021 அன்று ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. சரியாக 07.08.2021 இரவு 7.39 மணிக்குத் தொடங்கி 08.08.2021 இரவு 7.56 மணி வரைக்கும் அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. ஏன் ஆடி அமாவாசையன்று வழிபட வேண்டும்?: பொதுவாக வரும் அமாவாசைகளில், நம் முன்னோர்களை வழிபடுவது இருந்தாலும், ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அமாவாசையில் முக்கியமான மூன்று அமாவாசைகள் உள்ளன. அவை: 1.ஆடி அமாவாசை 2.புரட்டாசி அமாவாசை 3.தை அமாவாசை ஆடி அமாவாசை மேலோகத்தில் இருந்து நம்மை காண பூலோகத்திற்கு முன்னோர்கள் வருவதாக நம்பப்படும் நாள். இந்த நாளில் அவர்களை தர்ப்பணம் கொடுத்து வரவேற்பதே ஆடி அமாவாசையின் சிறப்பு. புரட்டாசி அமாவாசை அல்லது மஹாளய அமாவாசையில்…
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்கிற தர வரிசையில் தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல பதக்கங்கள் பொதுவாக வழங்கப்படுகின்றன. ஆரம்பகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு, ஆலிவ் மரத்தில் இருந்து எடுத்த ஆலிவ் கிளைகளை மாலையாக மாற்றி அதை பரிசாக வழங்கினர். பின்னர், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் கொடுக்கும் வழக்கம் 1896 ஆண்டில் நடைபெற்ற நவீன ஒலிம்பிக் போட்டிகளில் தான் தொடங்கப்பட்டது, அதிலும் வெள்ளியால் ஆன பதக்கங்களை மட்டும்தான் தொடக்கத்தில் வழங்கினர். பின்னர் 1904ல், அமெரிக்காவில் உள்ள செயிண்ட் லூயிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தான் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல் மூன்று இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டிகளில் கொடுக்கப்படும் பதக்கங்களை வடிவமைப்பது நேஷ்னல் ஒலிம்பிக் கமிட்டியின் பொறுப்பாகும். முதல் பரிசாக வழங்கப்படும் தங்க பதக்கம், வட்ட வடிவில், ரிப்பனுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த…