Author: இரா.மன்னர் மன்னன்

ஐபிஎல் லின் 14 வது சீசன் நேற்று நடந்த இறுதிப் போட்டியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. போட்டியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கோப்பையை பெற்ற போது அளித்த பேட்டியில் தோனி சொன்ன ஒரு பதிலால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்… அப்படி என்னதாங்க சொன்னார் தோனி? அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா? – என்ற கேள்விக்கு, ’அடுத்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் வரவுள்ளன. பிசிசியின் முடிவில் தான் என்னுடைய ஐபிஎல் பயணம் தொடர் அமையும்’ என்று தோனி கூற, அதற்கு வர்ணனையாளர், ’இது பிசிசிஐயின் பொறுப்பில் இல்லை, நீங்களும், சிஎஸ்கேவும் எடுக்க வேண்டிய முடிவு’ என்று கேட்டார். அதற்கு தோனி சிரித்துக்கொண்டே, ’நான் என்னை பற்றி யோசிப்பதை விட, சிஎஸ்கே பற்றிதான் யோசிக்க வேண்டும். இந்த அணி இன்னும் 10 ஆண்டுகள் சிறப்பாக அமைய வேண்டும். 2008 இல் இருந்து 2021 வரைக்கும் எப்படி சிறப்பா செஞ்சிருக்கோமோ,…

Read More

ஐபிஎல் டி 20 இறுதிப் போட்டியில் தோனி செய்த செயல் வைரல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஐபிஎல்லின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4 வது முறையாக கோப்பையையும் வென்றது. கடந்த சீசனில் ஃபிளே ஆஃப் சுற்றுகே தகுதி பெறாமல் முதலில் வெளியேறிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போ தோனி சொன்ன வார்த்தைகள், ’முன்பைவிட வலிமையோடு திரும்பி வருவோம்’ அப்படிங்கிறது தான். அதப் இப்போ உண்மையாக்கி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால தான் சார் அவர் ’தல’… சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டி என்றாலே எப்பவும் பரபரப்பும், அதிரடிக்கும் குறைச்சல் இல்லை என்றே சொல்லலாம். அதே போன்ற பரபரப்புடன் தான் இறுதி போட்டியும் நடந்தது. சென்னை சூப்பர்…

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இறுதிப் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிச்சுடும்னு நம்பின ரசிகர்களுக்கு தோனியோட பரிசு இந்த ஐபிஎல் கோப்பை. டாஸ் வென்ற கொல்கத்தா அணியினர் பவுலிங்கை தேர்வு செய்தனர். தோனி டாஸ் வெல்லாததே சென்னை ரசிகர்களுக்கு பகீர் என்று இருந்தது. ஆனா ’அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தாண்டா இருக்கு…’ என்பது போல் கொல்கத்தாவின் முடிவு சென்னைக்கு சாதகமானது. சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்தனர் ருதுராஜ் மற்றும் டூப்ளஸி. எப்படியும் அடிச்சே ஆடணும் என்று தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்கள் அடித்து ஆட தொடங்கினார்கள். ருதுராஜ் 32…

Read More

’மரணம்… மாஸ் மரணம்…’ பாடலுடன் தொடங்கியது நாள். அங்கங்க பிச்சிப்போட்ட மாதிரி ஆடினார்கள் ஹவுஸ்மேட்ஸ்கள். பாத்ரூமில் பிரியங்கா அபிஷேக்கிடம் தன் அப்பா இறந்தது முன்பே தெரியவந்த கனவுகளை பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். இது போல இன்னும் நிறைய சம்பவங்கள் தனக்கு சமிக்ஞையாக தெரிய வந்ததைப் பற்றியும் அபிஷேக்கிடம் பகிர்ந்துக் கொண்டார் பிரியங்கா… ஆனா அவர் சொல்றத பாக்கும் போது எனக்கு ’ஏன்டா கனவாயிருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா..?’ என்பது போல் இருந்தது. ’நம்ம கதைய சொல்றதுனால எந்த யூஸும் இல்ல, ஜஸ்ட் ஏன் எதுக்குன்னு மட்டும் சொன்னா போதும்’ – என்று பெட்ரூமில் நிரூப் சொல்ல, அதற்கு பிரியங்கா ’உன்ன ஒரு பிரதிநிதியாத்தான் மக்களுக்கு தெரியும், அதனால இப்போ உனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சிருந்தா நல்லா இருக்கும்னு அவன் நினைக்கணும்… அப்படி சொல்லணும் நீ…’ என்று பதில் சொன்னார். அடுத்து ’கத சொல்லட்டுமா’ டாஸ்க்குக்கு வந்தவர் நிரூப்தான். சராசரியான…

Read More

புகழேந்தி என கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்தான். அதே நேரம் மிகச்சரியாக ஒரு காவலர் அவனுக்கு எதிரே அவனைப் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் ஊழியரும் விடைபெற்றுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார். “சார் நான் கிளம்புறேன். ரொம்ப தாங்க்ஸ் சார்..”. உடனே சுதாரித்துக் கொண்ட புகழேந்தி , ” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. அங்க பாருங்க போலீஸ்காரா் ஒருத்தர் வந்துட்டு இருக்காரு.. அவருக்கிட்ட என்ன நடந்துச்சுனு சொல்லிட்டு போங்க… தேவையில்லாம என்னை பிரச்சனையில சிக்க வச்சுட்டு போயிடாதீங்க..” என்றான். ” சார் நீங்க பயப்படுற அளவுக்கெல்லாம் இது பெரிய பிரச்னையில்ல.. வழக்கம்போல விசாரிப்பாங்க.. என்ன நடந்துச்சுனு சொல்லிருங்க… நீங்க சொல்றதை ஸ்டேட்மெண்டா எழுதிகிட்டு கையெழுத்து கேப்பாங்க… அவ்ளோதான்… இதுக்கு எதுக்கு சார் பயப்படுறீங்க… நான் கிளம்புறேன் சார்.. ” என்றான். ” பார்த்தியா உன் வேலை முடிஞ்சதும் கிளம்பிப் போறியே.. அவரு என்கிட்ட பேசிட்டு போற வரைக்கும் கூட இருப்பா.. “…

Read More

ஒன்பதாம் காலை 7 மணி. ஐக்கியும் அண்ணாச்சியும் பேசிக்கொண்டு இருந்தார்கள், ’பாலிடிக்ஸ்லாம் நடக்குதா?’ன்னு அண்ணாச்சி கேட்க, ’என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை, கேம கேமா பாக்கணும், அப்புறம் மத்த நேரத்துல நாம நாமலா இருக்கணும், அதத்தான் மக்கள் பாக்குறாங்க… இதுல ஸ்டாடர்ஜி-க்கு என்ன வேலை?. ஒரு வேளை உன் ஸ்டாடர்ஜி என்ன அப்டின்னு கேக்குறதே ஸ்டாடர்ஜியா என்ன? எனக்கு புரியலை’-ன்னு சொன்னாங்க ஐக்கி. ஆனா எனக்கு ஒன்னு புரியலை, இன்னைக்கு பத்தாம் நாள்ன்னுதான வரும் என்ன பிக் பாஸ் ஒன்பதாம் நாளுன்னு சொல்றாரேன்னு யோசிக்குறேன், அப்புறம் சொல்றாரு பத்தாம் நாள் காலை எட்டு மணின்னு, பாவம் எடிட்டரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு. பிறகு ரவுடி பேபியுடன் நாள் தொடங்கியது. அடுத்து கதை சொல்லட்டுமா டாஸ்க்குக்காக வந்தார் அபிஷேக். ஒரு படத்தை சொல்வது போல சொல்ல ஆரம்பித்தார், ஹீரோக்கு பில்டப் குடுக்குற மாதிரி அவருக்கு அவரே பில்டப் குடுத்து. தன் அப்பா கர்ணனாக கடன்…

Read More

வேட்டைக்காரன் படத்தில் இருந்து ’ஒரு சின்னத்தாமரை…’ பாடலுடன் ஆரம்பித்தது ஒன்பதாம் நாள். என்ன பிக் பாஸ் பழைய பாடலுடன் ஆரம்பிக்குறாரேன்னு பாத்தா, அப்புறம் பாத்ரூமில் பிரியங்கா சொன்னத்துக்கு அப்புறம்தான் தெரிகிறது அது தலைவரான தாமரைக்காக டெடிகேட் செய்யப்பட்ட பாடல் என்று. முடியல பிக் பாஸ்… ’போர்வையை எல்லாம் மடிக்காம வந்துட்ட… நான் தான் மடிச்சு வெச்சேன்’னு தாமரை சொல்ல, ’அதான் மடிச்சிட்டல்ல… அப்போ இனிமே நீயே மடிச்சு வெச்சுடு…’ன்னு நக்கலடித்தார் ராஜூ. பிரியங்கா வெளியில் உல்ள சோபாவில், ’நான் தூங்கல…’ அப்டிங்குற மாதிரி கைய ஆட்டிக்கிட்டே தூங்க, பிக் பாஸ் நாய் விட்டுவிடுமா என்ன… நாய் குரைக்க உள்ளிருந்து ஓடிவந்தார் தாமரை. நான் தூங்கலைன்னு பிரியங்கா சமாளிக்க, நீ போய் பாத்திரம் விளக்குன்னு தாமரை சொல்ல, இமான் அண்ணாச்சிய கழுவ சொல்லுங்கன்னு டிமிக்கி கொடுத்தார் பிரியங்கா. அடுத்து கத சொல்லட்டுமா டாஸ்க்கில் கதை சொல்ல வந்தவர் அக்ஷரா. (ஏன் பிக் பாஸ்…

Read More

‘புளி மாங்கா புளிப்…’ பாடலுடன் ஆரம்பமானது பிக் பாஸின் 8ஆம் நாள். காலையிலேயே மத்தவங்கள இமிடேட் பண்றன்னு மைக்கை கழட்டி வெச்சதால பிக் பாஸ்கிட்ட பல்பு வாங்கினார் அபிஷேக், அதை கலாய்த்த பிரியங்காவும் பிக் பாஸ்கிட்ட அசிங்கப்பட பதிலுக்கு அபிஷேக் கலாய்க்க கலகலப்பான ஆரம்பமாக இருந்தது. இசைவாணி மற்றும் பாவ்னி குரூப்பிஸம் ஃபார்ம் ஆகியிருக்குறதாவும், தான் தனியா இருக்குறதாவும் அவங்க அவங்க அனுபவம் பற்றி பேசிக்கிட்டு இருக்க, ஐக்கி என்னன்னு கேட்டு அவங்களும் பேச்சுல சேர்ந்தாங்க. அவங்க தரப்பு பேச்சிலும் குரூப்பிஸம் இருக்குறது வெளிப்பட, அதை சுட்டிக்காட்டினார் இசைவாணி. பாத்ரூமில் இமான் அண்ணாச்சியும், தாமரையும் பேசும்போது, ‘நேத்தைக்கு அப்புறம் இப்போ கொஞ்சம் தெளிவாயிருக்கேன்..’ அப்படின்னு தாமரை சொல்ல, ’இதுல தெளிவா இருக்க என்ன இருக்கு… நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு’ன்னு அண்ணாச்சி சொல்ல, ’இல்ல நான் வெள்ளந்தியா பேசுற சில விஷயங்கள் சிலருக்கு தப்பா இருக்கு, நான் சிரிச்சாக்கூட தப்பா…

Read More

உலக மனநல நாள் என்பதால், கமல் புத்தக பரிந்துரையுடன் ஆரம்பித்தார் நிகழ்ச்சியை. The Emerging Mind’ என்கிற நூல். புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் வில்லியனூர் ராமசந்திரன் எழுதியது. அகம் டிவி வழியே அகத்திற்குள் என்று ஹவுஸ்மேட்ஸை சந்திக்க, உபசரிப்பு முடிந்ததும், எலிமினேஷன் இல்லை, அதனால ஜாலியா பேசுங்கன்னு ஆரம்பித்தார். கிச்சன் டீம், வேலைகளை சரியாக செய்கிறதா என்று அந்த டீமை தவிர மற்றவர்களை கேட்டு விசாரித்தார். பூண்டு குழம்பு ரொம்ப நல்லா இருந்தது, சாப்பாட்டை வீணாக்குவதில்லை, சின்னபொண்ணு சமையல் டீம் நன்றாக செய்கிறார்கள் என்று கூறினர் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும். அதே கிச்சன் டீமில் இருக்கும் பிரியங்காவும், நான் என் வீட்ல, டைனிங் டேபிள் தாண்டி போனது இல்ல, ஆனா இப்போ இங்க கிச்சன்லியே இருக்க, நானே சமைக்குறதுனால சாப்பிட தோண மாட்டேங்குது. அப்படியே சாப்டாலும், அடுத்தவங்ளுக்கு பத்தாம போயிடுமோன்னு நினைச்சு சாப்பிடுறேன் என்று கூறினார். வீடு சுத்தம் செய்யும் அணியும் சிறப்பாக…

Read More

தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற பிக் பாஸ் குரல் மூலம் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இப்படி மொட்டையா சொன்னா என்னடா அர்த்தம், தவிர்க்க முடியாத காரணத்துலதான் போயிருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுதே டா, அது என்ன காரணம் அப்டிங்கறது தானடா முக்கியம்… நமீதா, தாமரைசெல்விக்கு நடந்த சண்டைக்கு, கமல் சார் வந்து பஞ்சாயத்து பண்ணுவாரு, ’இல்லையே நீங்க அப்படி சொன்ன மாதிரி இல்லையே, உங்க நமட்டு சிரிப்புக்கு வேற அர்த்தம் மாதிரி தெரிஞ்சுதே’ன்னு கொஞ்சம் எண்ணைய ஊத்திட்டு போயிருப்பாரு…. எதுக்குமே வழி இல்லாம போச்சே… – என பார்வையாளர்களுள் மைண்ட் வாய்ஸ் ஓடிக் கொண்டிருந்தது… இந்த சீசனோட முதல் பஞ்சாயத்து நாள்ல, கமலின் பேச்சில் கிண்டல், கேலி, எல்லாம் இருந்தது, ஆனா அவரோட பேச்சு கொஞ்சம்… சாரி…. ரொம்ப போராவும் இருந்தது. அகம் டிவியே வழியே அகத்திற்குள் சென்றதும் கமல் ”ஆன்லைன் கிளாஸ்லாம் இப்பதான் ஆரம்பித்தார்கள்,…

Read More