Author: இரா.மன்னர் மன்னன்

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட பாதுகாப்பு தங்களுக்கும் வழங்க வேண்டும்என மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. கொனா பரவலை தடுக்க முககவசமும் தடுப்பூசி ஆகியவைதான் ஆயுதங்கள் என் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. வெளிநாடுகளை சேர்ந்த பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களின் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்நிலையில், தங்களின் தடுப்பூசியால் மக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அயல்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் வைத்துள்ளன. இதுவரை மத்திய அரசு எந்த தடுப்பூசி நிறுவனத்துக்கும் இத்தகைய சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த சலுகையை இந்த தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்: தடுப்பூசியினால் ஏற்படும்…

Read More

கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து வரும் வரும் நிலையில் தமிழக அரசு நோய் பரவலை முழுவதும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள சமையல் கூடத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தோசை சுட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் தோசை எப்படி சுட வேண்டும் என்பது குறித்த சில அறிவுரைகளை சமையல் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். மூவேந்தன்

Read More

கூகுள் இன்றைய டிஜிட்டல் உலகில் இணையவாசிகளின் நண்பனாக மாறியுள்ளது. அதே சமயம் கூகுளில் வெளியாகும் சில செய்திகள் இணைய வாசிகளை கொந்தளிக்கவும் செய்வது உண்டு. அந்த வகையில்இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன? – என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடிய போது அதற்கு பதில் கன்னடம் எனவந்துள்ள செய்தியால் கோபமான கன்னட மக்கள் பொங்கி எழுந்துள்ளனர். கன்னட மக்களோடு கர்நாடக அரசியல் கட்சியினர் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தனர். இது குறித்து பேசிய கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி இதற்கு கண்டனம் தெரிவித்தோடு கூகுள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதால் கூகுள் நிறுவனம் தற்போதுமன்னிப்பு கோரியுள்ளது. கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்கு வருந்துவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. அத்துடன் கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடுதளத்தில் வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. மூவேந்தன்

Read More

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மனைவியை கடித்ததற்காக பக்கத்து வீட்டினரின் செல்லப்பிராணியை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். இந்தூர் சுடாமா நகரை சேர்ந்தவர் நரேந்திர விஷ்வைய்யா. இவரது மனைவியை பக்கத்து வீட்டினரின் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி மூலம் நாயை கழுத்தில் சுட்டுக்கொன்றுள்ளார். இதுகுறித்த புகாரின் விஷ்வைய்யாவை கைது செய்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக இந்த நாய், தனது மனைவியை மட்டுமல்லாது அக்கம்பக்கத்தினர் சிலரையும் கடித்துள்ளதாக விஷ்வய்யா புகார் கூறியுள்ளார் இதனையடுத்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, உரிமையாளரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.- மூவேந்தன்

Read More

நாகப்பட்டினத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3 ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. அவர் இயற்பெயர் ‘தட்சிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூரில் ’தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார், காலப்போக்கில் அந்த அமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழக”மாக உருப்பெற்றது. முத்துவேல் கருணாநிதி முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பின்னர் 1946 ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டுவரை அதை மாத இதழாக நடத்தினார். 1953ஆம் ஆண்டில் மாத இதழாக சென்னையில்…

Read More

(கவிஞர் மகுடேசுவரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கு மறு பதிப்பு செய்யப்படுகின்றது) 1. ஒரு பாடலின் முதற்சொல் தொடங்குவதற்கு முன்பாக முதல் இருபது நொடிகள் அல்லது முப்பது நொடிகளுக்கு ஒரு முன்னிசை அமைத்திருப்பார். அந்த முன்னிசையின் இன்பத் திகைப்பிலிருந்து தப்பித்து நாம் நடுநிலைக்கு வருவதற்குள் அந்தப் பாடலின் முதல் வரி தொடங்கும். வேறு வழியின்றி அந்தப் பாடலுக்குள் நாம் நம்மையறியாமல் மூழ்கத் தொடங்குவோம். ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ முதல் ’ராக்கம்மா கையத் தட்டுவரை’ இத்தன்மையோடு அமைந்த எண்ணற்ற பாடல்களை எண்ணிப் பாருங்கள். இந்த நுண்முறையைத் தாம் இளையராஜாவிடமிருந்து கற்றுக்கொண்டு தம் பாடல்களில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் தேவா குறிப்பிடுகிறார். அவர் அதனைத் திறமையாகச் செயற்படுத்திய பாட்டு “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்.” 2. பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் புதுப்புது மெட்டாக அமைத்துச் செல்வார். அது முன்பே அமைந்த வரியின் தொடர்ச்சியான மெட்டாக இருக்காது. மாறி மாறி மெட்டின் திசை செல்கிறதே என்பதற்காக…

Read More

கு.ம.ஜெயசீலன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நன்னெறிப் பாடநூல் ஆசிரியர். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியுள்ள இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இதுவாகும். பத்துக்கும் குறைவான வயதில் மணமுடிக்கப்பட்ட ஒரு ஏழைப்பெண்ணின் உண்மைக்கதையே இந்நூல். 1929 ல் இந்தியாவில் குழந்தைமணம் தடை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும், உலகில் குறிப்பாக அரபிநாடுகளில் இது சாதாரணமாக நடக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அரபிப் பெண் எழுத்தாளர்களின் கதைகளில் தவறாது இடம்பெறும் அம்சம் சிறுமிகளைப் பெற்றோர் திருமணத்திற்கு வறுபுறுத்துவது. அங்கு உள்ள லட்சக் கணக்கான கண்ணீர்க் கதைகளில் இன்னொரு கதையாகவே நுஜூத்தின் கதை முடிந்திருக்கும், அவர் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால்… ஒரு குழந்தையின் பார்வையில் ஏமன் நாட்டின் கிராம வாழ்க்கை சொல்லப்படுகிறது. கிராமத்தில் மரியாதையோடு வாழ்ந்தவர்கள், நகரம் வந்ததும் அவமானப்படுவது தமிழ்நாட்டைப் போலவே ஏமனிலும் நடக்கிறது. Adulteryக்கு மரணதண்டனைக்கு வாய்ப்புள்ள ஏமனிலும் அது நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வறுமை, வறுமை தான் குழந்தை திருமணங்களுக்குக் காரணமாக…

Read More

மனிதன் தனது தொடக்கத்தை அறிந்து கொள்வதில் அளவில்லாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் காலத்தின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும். விழுப்புரம் கோ.செங்குட்டுவன் அவர்களின் இந்நூல் அவரது நேரடிக் கள ஆய்வுப் பயணத்தின் விளைவு. தீராத வேட்கையில் வரலாற்று தடயங்களை தேடிச் சென்றுள்ளார். இந்த பயணம் சங்கராபரணி ஆற்றங்கரையில் தொடங்கி கெடிலம் பம்பை ஆறுகளை ஊடறுத்து தென்பெண்ணை ஆறு வரை நீள்கிறது. நூலின் முன்னுரையில் நமது முன்னோடி பயண எழுத்தாளர்களான, நரசிம்மலு நாயுடு (ஆரிய திவ்ய தேச சரிதம்), த.சுப்பிரமணிய பிள்ளை (சிவஸ்தல மஞ்சரி), டி.பி. தாஸ் ராவ் (இந்திய ஸ்தல யாத்திரை மான்மியம்), பயண இலக்கியங்களின் தந்தை ஏ.கே.செட்டியார் (தமிழ்நாடு பயணக் கட்டுரை), சாமிநாத சர்மா (எனது பர்மா நடைவழிப் பயணம்) – என நிறைய ஆளுமைகளை குறிப்புகளுடன் நினைவு கூர்கிறார். இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர் தேடிச் சென்ற இடங்களின் அரிய…

Read More

அசோகர் காலம் தொடங்கி அக்பர் காலம் தொட்டு தற்போது மோடி காலம் வரை இந்தியா ஒருக்காலும் ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம் கொண்ட ஒற்றை தேசமாக இருந்ததில்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. இந்திய அரசமைப்பு சட்டம் இந்தியாவை ஒற்றை தேசமாகவோ இந்தியன் என்கிற தேசிய இனத்தையோ வரையறுக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. ஆனால் படையெடுத்து வந்த ஆரிய பிராமணர்கள் தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும் மேற்குலக வல்லரசுகளின் வணிக வேட்டைக்கான ஒற்றை சந்தையாக நீடிக்கவும் செய்யும் முயற்சிகளால் ஒற்றை அதிகாரமையக் குவிப்போடு, பாசிசத்தன்மை கொண்ட ஒற்றை தேசமாக இந்தியா உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்தித்திணிப்பில் தொடங்கி நீட் தேர்வு முதல் காஷ்மீர் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம், புதிய கல்விக்கொள்கை, குடியுரிமை திருத்தச்சட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளும் புதிய இந்தியாவான ‘பாசிச இந்தியா’ பிறப்பதற்கான செயல்பாடுகளே. இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் இந்திய துணைக்கண்டத்தில் ஓர் பெரும் உள்நாட்டு போர்…

Read More

சென்னையில் பிரபல பள்ளியான பிஎஸ்பிபியில் ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பள்ளியின் மீது பாலியல், ஜாதி ரீதியான பிரச்சனைகளை சந்தித்ததாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி சில மாதங்கள் முன்பு தனது யூடியூப் பக்கத்தில் பிஎஸ்பிபி பள்ளி மீது குற்றச்சாட்டு வைத்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, என்னுடைய மகளுக்கு அப்பள்ளியில் சீட் வாங்க வரிசையில் நின்றிருந்த போது திருமதி ஒய்ஜிபி அழைத்ததால் அவருடைய அறைக்கு சென்றேன். என்னம்மா நீ எல்லாம் வரிசையில் நிற்கலாமா? என கேட்டார். நான் பல சீரியல்கள்ல ஆக்ட் பண்ணியிருக்கேன், டிராமா, திரைப்படம் எல்லாம் பண்ணியிருக்கேன் ஆனாலும் யாரிடமும் போய் குழந்தைக்கு ஆப்ளிகேஷன் கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது .பள்ளியில் என் மகளுக்கு சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். பள்ளியில்…

Read More